Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 15 மார்ச், 2015

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள். ...
.

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார்; வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவதே
கள்ளமனமுடை கல்வியில் லோரே" - திருமந்திரம்.
.

மனதின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை. மனதின் மாண்பு எதுவோ அதுதான் மனிதனுடைய மாண்பு. மனதின் உயர்வு எதுவோ அதுவேதான் மனிதனுடைய உயர்வு. ஆகவே, மனதை எந்த அளவில் உயர்த்திக் கொள்ளுகிறோமோ, தூய்மை செய்து கொள்ளுகின்றோமோ, வலுப்படுத்திக் கொள்ளுகிறோமோ, நெறிப்படுத்திக் கொள்ளுகிறோமோ, அந்த அளவிலேதான் மனிதனுடைய வாழ்வு மனிதனுடைய மதிப்பு, மனிதனுடைய வெற்றி, மனிதனுடைய அறிவாட்சித்தரம் (Personality), மனிதனுடைய எல்லா வளங்களும் அமையும். இந்த அற்புதத்தைத் தான் தொடர்ந்து நாம் நமது சிந்தனை ஆற்றல் துணை கொண்டு நுணுகி நின்று பயிலும் 'மனவளக்கலை' பயிற்சியாகிய "குண்டலினியோகத்தால்" (Simplified Kundalini Yoga) சாதிக்கின்றோம்."
.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக