Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 30 நவம்பர், 2013

ஒலி

ஒவ்வொரு ஒலிக்கும் சீவகாந்தத்தை ஒவ்வொரு முறையில் இயக்கும் வல்லமை உண்டு. மொத்தம் 50 ஒலிகளை எழுத்துக்கள் மூலமாக உச்சரிக்கிறோம். ஒரு எழுத்துடன் மற்ற எழுத்து சேரும்போது, அந்தக் கூட்டு ஒலிக்குத் தனி விளைவு உண்டு. நீண்ட கால அனுபவத்தால் முன்னோர்கள் தனி எழுத்திலும், கூட்டு எழுத்துக்களிலும் ஏற்படும் நல் விளைவுகளையும், தீய விளைவுகளையும் கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். இந்த முறையின் மூலம் மனிதன் தேவைப்படும் பொருள், புகழ், புலன் இன்பம், அதிகாரம், நட்பு (வசியம்) இவற்றிற்கு எந்தெந்த ஒலிகள் எவ்வாறு ஒழிக்க வேண்டுமென்ற 'ஒலி விஞ்ஞானமே' மந்திரங்கள் ஆகும். தனக்கு என்ன வேண்டுமென்பதைத் தெளிவாக சங்கல்பங்களாக்கி பல தடவைகள் அதையே நினைத்தும் சொல்லியும் தனது அறிவாட்சித் தரத்தை மேன்மை படுத்திக் கொள்ள 'தந்திரம்' உதவுகிறது. எனவே பொருள் பற்று, மக்கள் பற்று உடையவர்கள் அவர்கள் விருப்பங்களில் வெற்றி பெற யந்திரம், மந்திரம், தந்திரம் இவை சிலை வணக்க முறையில் அடங்கியுள்ளதால், அத்துறையில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் சிலை வணக்கம் ஒத்ததாகும். மற்றபடி "இறையுணர்வு" எனும் ஞானநெறி பெற்றவர்களுக்கு இத்தகைய சடங்கு முறைகள் தேவையற்றதாகி விடுகின்றன. "வினை-விளைவு" (cause and effect) தத்துவம் இறையுணர்வு பெற்றவர்களுக்கு இயல்பாகி வாழ்வில் நிறைவு தரும்.                                                                                                                                                                            

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக