Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 2 டிசம்பர், 2013

எண்ணம் சீர்பட தற்சோதனை


எண்ணங்கள் தோன்றுவது இயற்கை தான், தேவையான, தூய்மையான எண்ணங்களுக்கு மட்டுமே ஊக்கம் கொடுக்க வேண்டும். மற்ற எண்ணங்களை விலக்கி விட வேண்டும். விலக்குதல் என்றால் விரட்டுதல் அல்லது ஒழித்தல் அன்று. "எண்ணத்தை அடக்க முயன்றால் அலையும், அறிய முயன்றால் தான் அடங்கும்". எண்ணத்தின் பேரிலேயே எண்ணத்தைத் திருப்பிவிட்டு ஆராய வேண்டும். அப்போது அந்த எண்ணம் மாறி, ஆராய்ச்சியும் விழிப்பு நிலையும் மிச்சப்படும். இந்த எண்ணம் பிறக்கக் காரணம் என்ன? இது செயலானால் என்ன விளையும்? எனவே இந்த எண்ணம் தேவையா, வேண்டாமா?' என்று ஆராய வேண்டும். வேண்டாம் என்றால் 'இனி இந்த எண்ணம் எழாமல் விழிப்போடு இருப்பேன்' என்று உங்கள் எண்ணமே சங்கற்பமாக மாற வேண்டும். சங்கற்பம் அழுத்தம் பெறப் பெற, மீண்டும் அந்தத் தீய எண்ணம் எழும்போது அதனோடு நீங்கள் முடிச்சுப் போட்டுவைத்திருக்கும் சங்கற்பமும் சேர்ந்துகொண்டு வந்து விழிப்பு நிலை பிறழாத வல்லமை காக்கப் பெறும்.

எந்த எண்ணத்தையும் உடனுக்குடன் அதன் வேரை ஆராய்ந்து வந்தோமேயானால் காலப்போக்கில் பிறர் எண்ணத்திற்கு ஆளாகாத விழிப்பு நிலை வந்துவிடும். தோன்றும் எண்ணங்களை அப...்போதைக்கப்போது ஆராய்ந்து பார்த்தால் பிறகு இதுவே ஒரு நற்பழக்கமாகவும் இலகுவாகவும் மாறிவிடும். தோன்றும் எண்ணத்திற்குக் காரணம் கண்டு பிடிக்காமல் விடக்கூடாது. மனத்தில் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கக்கூடிய எண்ணங்களென்று சில இருக்கும். அவற்றையும் இப்படித்தான் ஆராயவேண்டும். அப்படி ஒரு பத்துப் பதினைந்து தான் இருக்கும். மாதமொரு முறை ஆற்றும் மௌன(silence) நோன்பில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் கூடப் போதும்.

வெற்றி வேண்டுவோர் எதிர்வரும் பிரச்சினையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை [Analysis and Approach] வேண்டும். இந்த ஆராய்ச்சியும் அணுகுமுறையும் ஆன்மீக வாழ்வு நடத்தும் "மனவளக்கலைஞராகிய" நமக்கு மிகவும் அவசியம். இதற்கு நமது "குண்டலினி யோகம்" (அகத்தவப் பயிற்சி) மனோபலம் கிடைக்கவும், உண்டாக்கவும் மிக்க துணை புரியும்.


அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி,
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக