Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 8 நவம்பர், 2013

உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம்:

 
உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் தேச, மத, இன, மொழி, ஜாதி, பேதங்கள் அற்று வயதிற்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும், உணவு, உடை, இடம், கல்வி, தொழில், வாழ்க்கைத் துணை இவைகளைப் பெற்று, வாழும் திறமையறிந்து கூட்டுறவாக, ஒரே குடும்பத்தைப் போல் அன்போடும், பண்போடும் கடமையுணர்ந்து, கடமை புரிந்து, சமத்துவமாக, சுதந்திரமாக, ஆனந்தமாக, அமைதியாக வாழவேண்டும் என்பதே உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். இக்காலத்திற்கும் எதிர்கால மனித இனத்தின் நல்வாழ்விற்கும் தேவையான, உயர்ந்த வாழ்க்கை முறையை - திட்டத்தை - வகுத்து, அதன் மூலம் இன்று மனிதரிடையே நிலவி வரும், அறியாமையால் பெருகும், கற்பனை மயக்கம், வறுமை பேத உணர்ச்சி இவைகளை ஒழித்து, என்றும், எங்கும், எல்லோரும் இயற்கையில் விளையும் துன்பங்களைக் குறைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இதற்கு நாம் எடுக்கும் முயற்சி, வகுக்கும் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்:
1) மனித இன வாழ்விற்கும், இயற்கைக்கும் ஒத்த முறையில் அது இருக்க வேண்டும்.
2) மனித சமுதாயத்திற்குப் பொதுவாக இருக்கவேண்டும்.
3) சிரமமில்லாமல் அமுல் நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.
4) தொடர்ந்து பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
5) பல நாட்களாக உடற் கருவிகளை இயக்கிப் பழகிக் கொண்ட பழக்கங்களையும், பற்றுதல்களையும், கொள்கைகளையும் உடனே மாற்றவோ, விடவோ, விட்டுவிடச் செய்யவோ எளிதில் முடியாது. ஆகையால் படிப்படியாக அவசியமான மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். இந்த நோக்கத்துடனேயே, "உலக சமாதான திட்டம்" வகுக்கப்பட்டிருக்கிறது.



இந்தத் திட்டத்தின் அடிப்படை இலட்சியம் யாதெனில் ;-
உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் தேச, மத, இன, மொழி, ஜாதி, பேதங்கள் அற்று, வயதிற்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும், உணவு, உடை, இடம், கல்வி, தொழில், வாழ்க்கைத் துணை இவைகளைப் பெற்று, வாழும் திறமையறிந்து கூட்டுறவாக, ஒரே குடும்பத்தைப் போல் அன்போடும், பண்போடும் கடமையுணர்ந்து, கடமை புரிந்து, சமத்துவமாக, சுதந்திரமாக, ஆனந்தமாக, அமைதியாக வாழவேண்டும் என்பதேயாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக