Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 21 நவம்பர், 2013

இந்திய நாட்டின் பொருளாதார சீர்கேடு பற்றி மகரிஷியின் கருத்து :



இயற்கை வளம், மக்கள் பண்பாடு, அந்நிய நாட்டுத் தொடர்பு , ஆட்சிமுறை, இயற்கையாக ஏற்படும் சில திடீர் விளைவுகள் ஒன்றோ சிலவற்றாலோ ஏற்பட்டுள்ள குறைபாடு தான் ஒரு நாட்டின் பொருளாதாரச் சீர்கேடாக மாறுகிறது.


** மக்களை அடக்கியாளவும், பொருட்களைச் சுரண்டவும் ஏற்ற முறையில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் நிர்வாகச் சட்டங்கள்.

**சுதந்திரம் கிடைத்து விட்டதனால் இது வரை அடக்கி வைத்திருந்த தேவைகளை உடனே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற மக்களின் பேரார்வம் .

**அரசியல் தலைவனாக வந்துவிட்டால், பொருள்,புகழ் , அதிகரம், அந்தஸ்து என்ற நான்கும் கிடைக்கின்றனவே அவற்றை நானும் ஏன் அடையக்கூடாது என்ற ஒரு சிலர் கொள்ளும் பேராசை.

**பணத்திற்கும், கவர்ச்சிக்கும் , பேச்சுகளுக்கும் மயங்கித் தங்கள் ஓட்டுரிமையை மக்கள் வீணாக்கும் பரிதாப நிலை .

**இந்த நாட்டில் உற்பத்தியாகாத வெளி நாடுகளில் செய்கின்ற பொருட்களையும், அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களையும் உபயோகிக்கும் பழக்கம்.

** போதிய அளவில் உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மக்கள் பெற வேண்டிய கல்வியின்மை , வறுமை .

**மூடப்பழக்க வழக்கங்களுக்காகவும் , சடங்கு சம்பிரதாயங்களுக்காகவும் பொருளாதாரத்தையும் , சுகாதாரத்தையும் வீணாக்கும் பழக்கம் இவை அனைத்தும் சேர்ந்து , ஒன்றுடன் ஒன்று பலவுடன் பல மோதி இந்த நாட்டில் இன்றிலிருக்கும் சீர்கேட்டினை உருவாக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக