Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 25 நவம்பர், 2013

வாழ்க்கை சிக்கல்களை போக்க மனவளக்கலை :



வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்த மனப்போராட்டம்.சமுதாய கூட்டமைப்பில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களிலும் வேறு பலரும் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்து விட்டாலும் அவனோடு பின்னபட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும்....

சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது . அப்படி அமைத்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டு தவிக்கும் வரையிலேந்த மனிதனும் சும்மாயிருக்க மாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதி விலக்கு .

சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். இதையெல்லாம் நம் மனந்தான் செய்தாக வேண்டும்.


தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனத்தின் தரத்தையும் , மனத்தின் திறத்தையும் - அதாவது மனத்தின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.அதற்கு மனவளக்கலை பயிற்சி அளிக்கின்றது .

தன்னிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம் , கடமை, ஈகை என்கின்ற அறநெறி காத்துவாழும் ஒரு தேர்ந்த மனவளக்கலைஞனுக்கு -குண்டலினியோகிக்கு சிக்கல்களை தானாகவே தீர்த்துக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். சிக்கல்கள் வரவே வராது.

--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக