Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சீவகாந்தம்

'சீவகாந்தம்' என்பது இருப்புநிலை, இயக்க அலை என்ற இரண்டு தத்துவங்கள் கூட்டாகச் செயல்படும் பேராற்றலாகும். உடலுக்குள்ளாகக் காற்று, இரத்தம், சீவகாந்தம் இவை எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஓரளவு உரசல்கள் இயற்கையாக ஏற்படுகின்றன. இத்தகைய உரசல்கள் உடல்இயக்கம் மற்றும் மன இயக்கங்களுக்கு ஆக்க முறையில் அளவோடு இருக்கும்போது மனம் இந்த உணர்வுகளைச் சமநிலை உணர்வாக, அமைதி நிலையாக அனுபவிக்கின்றது. எந்த விதமான உரசல் ஆனாலும் அந்த அளவிலே 'சீவகாந்தம்' அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. 'சீவகாந்தம்' அவ்வாறு மாற்றம் பெறுவதையும் அதனால் ஏற்படும் ஆற்றல் செலவையும் மனம், உணர்வாகப் பெறுகின்றது என்பதை இயற்கையின் நியதியாக மனதில் கொள்ள வேண்டும். தினசரி வாழ்வின் நிகழ்ச்சிகளாக இந்த உண்மையினை மனிதமனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனினும், ஆறாவது அறிவுநிலை போதிய வளர்ச்சி பெற்றுப் "புற உணர்வோடு அக உணர்வும்" மலரும் போதுதான் - உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது - உணர்பவனையும் அறியமுடிகிறது.  

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக