Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சினத்தை ஒழிக்க நடைமுறையில் வெற்றியடையத்தக்கதொரு பயிற்சித் திட்டம்

கோபமோ மனத்தின் அடித்தளமான உயிராற்றலுக்கு, அது விரைந்து விரைந்து செலவாகும் வேகத்தைக் கொடுத்து விடுகிறது. எனவே கோபம் கொள்ளும் மனத்தினால் ஒடுங்கி நின்று தவமியற்ற (Meditation) இயலாது. முக்கியமாக மனம் தன் சுயநிலையாகிய சுத்தவெளியை, தெய்வநிலையை எட்டாது. உலக சமுதாய சேவா சங்கத்தின் "மனவளக்கலை" பயிற்சியில் தவம், தற்சோதனை மூலம் சினத்தை ஒழிக்க நடைமுறையில் வெற்றியடையத்தக்கதொரு பயிற்சித் திட்டம் உள்ளது. நாம் 'குண்டலினி யோகமாகிய'(Meditation) 'மனவளக்கலையை' பயின்று, மனம் ஒடுங்கி ஒடுங்கி நின்று தவமியற்றிப் பழகிப் பழகி கூடவே "தற்சோதனையில்" சினம் தவிர்த்தல் என்ற சிந்தனையை தூண்டும் பயிற்சியின் மூலமும் தான் இந்தச் சினத்தை வெல்லும் திறன் மனத்திற்குக் கிட்டும். அதனால்தான் ஆறுகுணச் சீரமைப்பையும் துரியாதீத தவத்தையும் நாம் ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறோம். இறைநிலையோடு கலந்து பழகித் தவமியற்ற - தவம் இயற்றத்தான் "சட்டென்று விரிந்து சினமாக மாறாத தகைமை(ability) மனத்திற்குக் கிட்டும்".
சினம் அச்சம் இரண்டும் ஓர் மனிதன் வாழ்வில்
சீர்குலையச் செய்யும் கொடும் உட்தீயாகும்.
சினம் அச்சம் ஒழிய சிந்தனையை ஏற்றி
சிவன் சீவன் நிலைகளை நன்குணர வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
"மனமென்னும் மாடு அடங்கில், தாண்டவக்கோனே; முக்தி
வாய்த்ததென்று எண்ணேடா, தாண்டவக்கோனே!
சினமென்னும் பாம்பு இறந்தால், தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா, தாண்டவக்கோனே".
- இடைக்காட்டுச் சித்தர்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக