Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

இறைநிலையை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

காட்டாற்று வெள்ளத்தை ஓர் அணைக்கட்டாகக் கட்டி கால்வாயில் விட்டு பாசனவசதி செய்தால் எவ்வாளவு நன்றாக இருக்கும்?அந்த மாதிரி மனிதனின் ஆற்றலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டுமானால் "இறைநிலையை" பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இறைநிலை இல்லாத மனித வளம் என்பதோ மனித செயல் என்பதோ இல்லை. இறையாற்றல் இல்லாத இடமே இல்லை. இறைநிலை இல்லாத அசைவே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது தான் உண்மை. அப்படியானால் உடலுக்குள்ளாகவும் அந்த ஆற்றல் இருக்கத்தானே வேண்டும். உடலுக்குள்ளாக இறைநிலையை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் வேறு எங்கே போய் கண்டுபிடிப்பது? என்ற சிந்தனையைச் செலுத்த முடியுமேயானால் வெகு சீக்கிரத்தில் இறைநிலையை பற்றி உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான வழி - "இறைநிலையை" உணர்ந்த குருவின் மூலம் கிடைக்கும் தத்துவ விளக்கங்களும், முறையான 'அகத்தவப் பயிற்சியும்', சிந்தனையுடன் கூடிய 'அகத்தாய்வு பயிற்சியும்' கற்று பயன் கொள்ள வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக