Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 15 நவம்பர், 2013

மகான் வாழும் இடமே கோவில்


பிரபஞ்சம் அனைத்துமாக இருப்பது ஒரே கடவுள் தான். இறைநிலையாகிய கடவுளை வணங்குவதைவிட சிந்திப்பதே மேல் என்றார் இராமாநுஜர். மனிதனுக்கு, அவன் வரும் முன்னரே, உணவாகவும், மருந்தாகவும் பயன்பட தாவரத்தைப் படைத்த இறைநிலையின் கருணையின்பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் கரு உருவானவுடனேயே, அந்தத் தாயின் அசைவு அந்தக் கருவைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அங்கே ஒரு தண்ணீர்க் குடம் அமைத்தது இறைநிலையின் கருணையேயாகும். உப்புத் தண்ணீரை உயரே ஆகாயத்தில் ஏற்றி, உப்பு நீங்கிய நன்நீரை மழையாகப் பெய்வித்து ஜீவன்களின் தாகத்தைத் தீர்க்கிற இறைநிலையின் கருணையை போற்ற வேண்டும். உடலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டுவிடும்போது, அந்தக் காயத்தின் வழியாக அத்தனை இரத்தமும் வெளியேறி விடாமல் இருக்க, அங்கே இரத்தத்தை உறைய வைக்கும் அந்த இறைநிலையின் அன்பையும், கருணையையும் உணர வேண்டும்..

இறைநிலை கருணை மிகுந்தது. அன்பே சிவம் என்பதும், அல்லாஹ் கருணை மிக்கவர் என்பதும் இதனையே வலியுறுத்துகின்றன. அன்பும் கருணையும் நமது செயலில் மேலோங்கும்போது இறை எவ்வழியோ அவ்வழியே நாமும் செயல்படுகிறோம். அதுவே இறைவழிபடுதல் அல்லது இறைவழிபாடு என்பதாகும். மனிதன் இறைவழிபடும்போது, இயற்கையோடு இசைந்து வாழ்வதால் அவன் வாழ்வாங்கு வாழ்கிறான்.

மனிதன் தன்னை உயர்த்தி இறைவழிபடுதலே மிகச்சிறந்த இறைவழிபாடாகும். அவ்வாறு உயர, அன்பும், கருணையுமே அவனுக்கு ஆதாரங்கள் அன்பினாலும், கருணையினாலும் உயர்ந்த மனிதனே வணங்கத்தக்கவன் ஆவான். அவன் வாழும் இடமே கோவிலாகும். கோவில் என்பது யாரோ யாருக்காகவோ கட்டுகிற கட்டிடமல்ல, சிந்தனைச் செறிவோடு, அகத்தின் அமைதியில், மனத்தூய்மை பெற்ற மகான் வாழும் இடமே கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக