Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அறிவும் புலன்களும் :

மனிதன் அறிவு மற்றெல்லாவற்றையும் விடச் சிறப்புற்றிருந்தும் அது ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்குண்டு மயங்கி இன்ப துன்ப அனுபோக அனுபவங்களிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. ஆன்மாவின் களங்கங்களான பழிச்செயல் பதிவுகளைத் தூய்மை செய்து பரம்பொருளை உணர்ந்து அதோடு கலந்து முடிவதற்கே உடலை ஒரு கருவியாக அமைத்துக் கொண்டிருக்கும் உண்மையினை மறந்து, மயக்கத்தில் (மாயை நிலையில்) செயல்புரிந்து கொண்டிருக்கின்றது. அறிவு முதிர்ந்து சிந்தனையினால், தானே தெளிவு பெறும்போது அல்லது தெளிந்தவர் சுட்டிக்காட்டி உணர்த்தும்போது அறிவு விழிப்புநிலை அடைகிறது. கடவுள் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அறிவில் ஓரளவு உயர்ந்தோர்களுக்கே ஏற்படுகின்றது. அறிவின் கூர்மை பெற்றவர்கள் மாத்திரமே சிந்தித்து அக்குறையை அறிவின் விளக்கத்தால் போக்கிக் கொண்டவர்கள் சிலர். அந்நிலையை உணர்ந்த ஞானிகள் விளக்கிய போதனைகளை கடைபிடித்து நலம் பெற்றவர்கள் பலர்


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக