Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 6 நவம்பர், 2013

பிரம்மம்

இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களிலே, இயக்கங்களிலே மனிதனுடைய அறிவிற்கு எட்டியவை, எட்டாதவை என்று இரண்டாகப் பிரித்தால் புலனறிவுக்கு எட்டாதவை மனம், உயிர், மெய்ப்பொருள் இவையாகும். இவை மறைபொருள் என்று கூறுகின்றோம். வெறும் நூலறிவினாலே இந்த மறை பொருட்களை விளக்க முடியாது. அவனே அதுவாகி அந்நிலையிலே தோய்ந்து உணர்ந்த தெளிவிலே தான் விளக்க முடியும். மனத்தின் உண்மையான அடித்தளத்தை மனத்தின் நிலையை விஞ்ஞானிகளால் உணர முடியாது. முழுமுதற் பொருளாகிய அந்த பிரம்மமே, சுத்தவெளியே மனதிற்கு ஆதி நிலையாக உள்ளது என்று எண்ணத்தக்கதாக, கருதக் கூடியதாக, அறிவுநிலை அதுவாகி மாறி உணர வேண்டும். அதுவே, இயக்கத்தில் மனமாக இருக்கிறது. தன் உணர்வில் அறிவாக இருக்கிறது. தன் முடிவில் பிரம்மமாக, முழுமுதற் பொருளாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. பழத்திலே சாறாக இருப்பது எதுவோ, அதுவே வெளியிலே தண்ணீராக இருக்கிறது. அதே போலத் தண்ணீர் நிற்கின்ற இடத்திற்குத் தகுந்தவாறு அதனைக் குட்டை, ஏரி, ஆறு என்று குறிப்பிட்டுப் பேசுவது போல அந்த பிரம்மமே, சுத்தவெளியே எல்லாவற்றிலும் கலந்தும் ஊடுருவியும் உள்ளது.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக