Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

"கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது ?" :-

 .
மகரிஷியின் பதில் :-
----------------------------
"சூரியனுடைய மையத்தில் ஏற்படுகின்ற காந்த அலைப்பாதையை (Black Hole) ராகு, கேது, என்று பார்த்தோம். அந்த ராகு, கேது காந்த அலைப் பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இந்த மூன்றும் வரும்போது அங்கு மறைவு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன. அனால் கிரகணம் வருவதில்லை. ராகு, கேது என்ற அந்த Black Hole க்கு நேரில் இவை மூன்றும் வருகின்ற பொழுதுதான் அந்த மறைவு உண்டாகிறது. அதை கிரகணம் பிடித்துவிட்டது என்று சொல்கிறோம்.
.
சந்திரன் மத்தியில் வந்து சூரியனை மறைக்கும் பொழுது நேரடியாக அந்த இடத்தில் ராகு அல்லது கேதுவினுடைய காந்த அலைப்பாதை அமையும்பொழுது அது சூரிய கிரகணம். பூமி நிழல் சந்திரனுடைய ஒளியை மறைக்கும் பொழுது அது சந்திர கிரகணம் என்கிறார்கள்.
.
சந்திரனை பூமி மறைக்கும் போது அதாவது பூரண சந்திரன் தினத்தில் (Full Moon) சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுமையத்தில் பூமி இருக்கும். அப்பொழுது பூமியின் நிழல் சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைக்கும். அதைத் தான் "சந்திரகிரகணம்" என்கிறார்கள். அதுவும் ராகு, கேது என்ற Black Hole க்கு நேரில் வந்தால்தான் அந்த நிழல் தெரியுமே தவிர மற்றபடி மறைப்பதில்லை. ஆகையினால் ஒவ்வொரு கிரகணத்தின் பொழுதும் ராகு பிடித்து விட்டது என்றும் இவற்றை சூரியனை பாம்பு விழுங்குகின்றது என்றும், சந்திரனை பாம்பு விழுங்குகின்றது என்றும் சொல்கிறார்கள. ராகு, கேது இரண்டும் கரு நிறமான நீண்ட காந்த அலைப்பாதைகள். நீளமாக வருவதையெல்லாம் பாம்பு என்றுச் சொல்லிக் கொள்வது வழக்கம். அதேபோல் இராகு, கேது இரண்டையும் பாம்பு என்று சொல்லி நம்ப வைத்துள்ளார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக