Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 25 ஏப்ரல், 2015

ஆறாவது அறிவு

"மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மூன்று மறைபொருட்களை உணரத்தக்க ஆற்றலே ஆறாவது அறிவாகும். இவ்வாறு அந்த ஆறாவது அறிவைப் பெற்ற மனிதன், ஏன் அறிய வேண்டியதை அறிய முடியாமல் தவிக்கின்றான். தவறுகள் அல்லது தீமைகள் செய்து அதன் வழியாக ஏன் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறான் என்று நாம் பார்த்தோமேயானால், சஞ்சித கர்மம் என்று தொடர்ந்து வந்த பழக்கத்தினால் என்னென்ன காரியங்கள் செய்தானோ அவையெல்லாம் பதிவாகி இருப்பதாலே,... அவ்வப்போது அந்த பதிவுகள் தூண்டுதல் பெற்று இயக்கம் உண்டாகி, சாதாரணமாக ஐயுணர்வு வயப்பட்ட செய்கைகளிலேயே மனிதனை இழுத்துக் கொண்டு போகின்றன.
.

அறிவானது உயர்ந்து மனதை அறிய வேண்டிய அளவுக்கு வராது தவித்துக் கொண்டு இருக்கின்றது; போதிய சக்தி மனத்திற்குக் கூடி வராததே இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கின்ற முயற்சியிலே அகத்தவத்திலும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்விலும் (Introspection) ஈடுபடவேண்டும்.".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக