Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 18 ஏப்ரல், 2015

"முழுமையான அறிவு" :


முதல் நிலை: ...

"எல்லாமே உயிரற்ற பொருட்கள் என்று நாம் எண்ணுகிறோமே அவை எல்லாம் கூட அறிவுடையவை தான். ஒவ்வொரு அணுவுக்கும் அறிவு [Consciousness] என்ற ஒன்று உண்டு. அணுவும் அணுச் சேர்ந்த கூட்டும் - Pattern, Precision, Regularity என்ற முறையிலே வடிவம், தன்மை, இயக்க ஒழுங்கு என்ற மூன்று தன்மைகளோடு எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன."
.

இரண்டாவது நிலை:

"அதே அறிவு தான் உயிர்த்தன்மை ஏற்பட்ட பிறகு புலன்கள் வழியாக இயங்குவதற்குப் பொருளை உணர்தல், அதனோடு இன்ப துன்ப உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஒன்றோடு ஒன்று பிரித்து ஒப்பிட்டு நோக்குதல், அதாவது Cognition, Experience and Discrimination இவையாக மலர்கின்றன. இது தான் Perceptional ability. இது இரண்டாவது நிலையாகும் அறிவுக்கு."
.

மூன்றாவது நிலை:

"அதே அறிவு மனிதனிடத்திலே இந்த இரண்டோடு கூட, அதாவது Pattern, Precision, Regularityமுதல் தன்மை; இரண்டாவது Perceptional ability - Cognition, Experience and Discrimination என்ற இரண்டாவது பிரிவும், மூன்றாவதாக மனம், உயிர், மெய் [ Mind, Life Force otherwise known as Spirit, and Truth ] என்பதாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய - அறிவையே அறிவால் அறிந்து கொள்ளத்தக்க ஆற்றல் தான் மனிதனிடத்திலே உள்ள முழுமையான அறிவு."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக