Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான திருமந்திரமாகும்

 "வாழ்த்து "என்றாலே அதை நினைக்குந்தோறும், அதைச் சொல்லுந்தோறும் மனதிலே ஒரு அமைதியான இயக்கம் ஏற்படும். ஏனென்றால் பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். அந்த வாழ்த்தோடு "வாழ்க வளமுடன்" என்று சேர்ந்து சொல்லி விட்டோமானால் எல்லாப் பேறுகளையும் உங்களுடைய வாழ்க்கையிலே பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் என்ற விரிந்த ஆழ்ந்த கருத்தினை உடையதான வாழ்த்தாக அமையும். எனவே நாம் எப்போதும் பிறரை வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகைப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம். பகைமையைத் தவிர்க்கலாம். அதோடு மட்டிலுமின்றி நாம் "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்பொழுது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஒரு இனிய நட்பை வளர்க்கிறது.
.

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை "வாழ்க வளமுடன்" என இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். "வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில், இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும்". ஒரு செடியைப் பார்த்துக்கூட "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த வாழ்த்த, அந்தச் செடியில் உள்ள பலவீனம் மாறி அது நல்லதாக மாறும்.
.

ஜீவனிலிருந்து, உயிர்ச் சக்தியிலிருந்து சுழன்று வரக்கூடிய அலை இருக்கிறதே அது என்ன கருத்து கொள்கின்றோமோ, அந்தக் கருத்தோடுதான் அந்த அலை வீசும். அந்த அலை எங்கெங்கே பாய்கின்றதோ அதே கருத்துக்கு ஏற்ற விளைவுகளை அந்தப் பொருளிலிருந்து கொடுக்கும். இது தான் psychology. நீங்கள் இருக்கக்கூடிய அலை நீளத்திற்கு (frequency) தகுந்த வாறு, அத்தகு உள்ளத்திலிருந்து நீங்கள் யாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, அந்த ஜீவகாந்த அலையோடு ஒருமித்துப்போகிறது.
.

"வாழ்க வளமுடன்" என்று சொல்லும்பொழுதே அந்த வார்த்தையிலே உள்ள ஒரு கருத்தாழத்தை நினைந்து பாருங்கள். "வாழ்க" என்று சொன்னாலே எல்லாம் பெற்று இனிதாக நீங்கள் வாழ வேண்டும் என்ற பொருள் உள்ளடங்கியிருக்கிறது. "வளமுடன்" என்று சேர்க்கும்பொழுது வாழ்க்கையிலே உங்களுக்குத் தேவையான எல்லாப் பேறுகளையும், பெற்று வாழவேண்டும் என்று அமைகிறது. ஆதலினால் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துவது மிக்க வலுவுடைய, ஆழமான கருத்துடைய, நல்ல ஆற்றலைப் பிறருக்குப் பாய்ச்சக் கூடிய ஒரு வார்த்தையாகும். "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல உடல் நன்றாக இருக்கும் மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் (Vibration) இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்த்தி வாழ்த்தி, ஒருவருடைய செயல்களைத்
திருத்திவிடமுடியும்.
வாழ்த்தி வாழ்த்தி, அவருடைய எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்;
வாழ்த்தி வாழ்த்தி, எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்".
.

"உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்" என்று நமக்குள்ளாகவே பல தடவை சொல்லிக்கொள்ளும் பொழுது, நமக்குள்ளாகவே இருக்கக்கூடிய உயிரியக்கத்திற்கு ஒரு ஒலிப்பதிவை ஏற்படுத்திவிடுகிறோம். இந்தப்பதிவு தானாகப் பலமுறை விரிந்து விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். அதிலுள்ள ஆழமான பொருளும் மனதிற்கு இயல்பாகிவிடும். இவைகளையெல்லாம் அடையவேண்டிய அளவுக்குச் செயல்புரியும் வாய்ப்பும், செயல்புரிய வேண்டிய பொறுப்புணர்ச்சியும் எழுந்துவிடும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக