Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 23 ஏப்ரல், 2015

வினைப்பதிவுகள்

'ஈரறிவு முதற்கொண்டுதான் 'வினைப்பதிவுகள்' (Sins & Imprints) ஆரம்பமாகின்றன !.....
-----------------------------
.

"இறைநிலையிலிருந்து நேராக மனிதன் தோன்றிவிடவில்லை. பரிணாமத் தொடர் என்ற பயணத்தில் கோடிக்கணக்கான சீவ இனங்களில் நடைபெற்ற இயக்கங்கள் அனைத்தும் வினைப்பதிவு நியதிகளினால் தொடர்ந்து வந்து மனிதனிடம் முடிந்திருக்கின்றன. ஆங்காங்கு ஏற்பட்ட தேக்கம், தாக்கம், தடமாற்றம் இவைகள் தான் தீய வினைப் பதிவுகளுக்கு காரணம்.
.

இறைநிலையான தெய்வம் அணுவாகி, அண்டங்களாகி, உலகின் மீது ஓரறிவான தாவரம் ஆன வரையில், எந்த பழிச்செயலும் விளையவில்லை, பதிவுகளும் இல்லை. 'ஈரறிவு முதற்கொண்டு ஐயறிவு விலங்கினங்கள் வரையில் உயிர் வகைகளின் வாழ்க்கை முறையின், செயல்களின் மூலம் எழுந்த காந்த அலைகள் அனைத்தும், அதாவது - பிற உயிர் வருத்தல் அல்லது கொலை செய்தல், அதன் உடலைப் பறித்து உண்ணுதல், அதன் வாழ்க்கைச் சுதந்திரம் பறித்தல், ஆகியவை கருமையத்தில் (Genetic Center) பதிவுகளாகி விடுகின்றன. அப்பதிவானது (களங்கங்கள் - Sins & Imprints) வித்தின் மூலமே மனித இனத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக