Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 29 ஏப்ரல், 2015

மனவளக்கலையென்னும் வாழ்க்கை விஞ்ஞானம்


 1) இறைவெளி - இருப்பு நிலை (Unified Force)
.

2) விண்துகள் ( Infinitesimal Whirling Wave Particle) இதனை உயிர் (Energy Particle) என்றும் வழங்குகிறோம்.
.

3) காந்த ஆற்றல் (Magnetism). இது இறைவெளியும் விண்துகள் சுழலிலிருந்து பிறக்கும் விரிவலையும் சேர்ந்த கூட்டு ஆற்றல்.
.

இந்த மூன்றையும் உணர்ந்து கொள்ளும் கருவி மனித மூளைதான். இந்த அற்புதமான ஆற்றல்தான் ஆறாவது அறிவு ஆகும். இந்த ஆறாவது அறிவு மறை பொருட்களை உணர்வதோடு உடல் கருவிகளுக்கு உப கருவிகளை உற்பத்தி செய்து இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்கும் செயல்களைத் துரிதமாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க உதவுகிறது.
.

ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால்தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும், இட்டுண்டு வாழும் ஏற்றமுள்ள "அறிவாட்சித்தரம்" பண்பாடாக அமையும். ஆறாவது அறிவைக் கொண்டு மறைபொருள் விளங்கிக் கொள்ள முடியாத போது அறிவு தடைபட்டு, தேக்கமுற்று, தன்முனைப்பாகி, ஆறுகுணங்களாகவும், ஐம்பெரும் பழிச்செயல்களாகவும் மாறி செயல்படும்போது வாழ்வில் அளவு மீறியும், முறை மாறியும் செயல்கள் செய்து, அதன் விளைவாக சிக்கல், துன்பம், நோய்கள், அகால மரணம் இவை உண்டாகி தனி மனிதனும் சமுதாயமும் துன்பக் கடலாகின்றது. இந்த நிலையில்தான் மனிதன் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், மயக்கம், பழக்கம் எனும் அறிவு வறுமையில் சிக்கி பிறர்வளம் பறித்து வாழும் பண்பாடு மனிதனிடம் பிறந்து ஓங்கி வளர்கின்றது.
.

இவ்வுண்மைகளை ஆராய்ந்து அறிந்த அறிவில்தான் 'மனவளக்கலையென்னும்' (Simplified Kundalini Yoga) போதனைகளோடு கூடிய சாதனை முறையாக வாழ்க்கை விஞ்ஞானம் மலர்ந்தது. எல்லாரும் அத்தகைய ஆக்க வழி வாழ்க்கை விஞ்ஞானக் கல்வியை (Simplified Kundalini Yoga) எளிய முறையில் பயின்றும், பரப்பியும் அமைதியான வாழ்வை மனித குலத்தில் பரவச் செய்வோம். ஆண்டுகள் பல ஆனாலும், தலைமுறைகள் பல ஆனாலும் நமது தொண்டு நிச்சயம் மனித குலத்தில் அமைதியென்னும் சிறந்த பயனைத் தரும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஓரறிவு முதலாய் ஆறறிவு பெற்ற
உறவு கருத்தொடர் மூலம் நீடித்தோங்கி
சீர்அறிவு படிப்படியாய்ப் புலன்கள் மூலம்
சிறப்படைந்து சிந்தனையாய் உயர்ந்த போது
பேர்அறிவாய் நிறையுணரும் பேறு பெற்றோம்
பிறப்பு இறப்பென்னும் சூழலைக் கடக்க ஏற்ற
நேர்அறிவு வாழ்வில் நல்ஒளியாய் ஆற்ற
நினைந்து நினைந்தக மகிழும் நிறைவில் உள்ளோம்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக