Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 27 ஏப்ரல், 2015

எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன 'அலை' வந்து சேர வேண்டுமோ அதை நம் 'மனமானது' தானாகவே இழுத்துக்கொள்ளும்

"தியானத்தின் மூலம் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து "வாழ்க வளமுடன்" என்று ஒருவரை வாழ்த்துவது என்றால் அந்த வாழ்த்துதலினுடைய பலன் இந்த "அலை இயக்கத்தில்" ஒரு தன்மையுடையதாகிறது. முதலில் நம்மை வாழ்த்திக் கொள்கிறோம். பிறகு வாழ்த்தானது அது போகும் இடமெல்லாம் அதே அலைத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவருடைய தன்மையை மாற்றி வாழ்வை வளப்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலை முடிப்பதற்கு அறிவை உயர்த்துகிறது. எனவே நல்ல எண்ணம், நல்ல செயல் இரண்டும் வேண்டும். நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) - அதாவது "அகத்தவம்" (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய "அறநெறி வாழ்வு" வேண்டும்.
.

இந்த இரண்டின் வழியே தான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும். எல்லாம் வல்ல இறைநிலை (Almighty), எந்த செயலுக்கும் ஒரு விளைவைத் தருவது என்றால் அது ஊடுருவி நின்று செயல்படுவது. எதுவும் தவறு செய்யாது. யார் என்ன நினைத்தாலும் நம் வினைப்பதிவிற்கு ஏற்றவாறு அதற்குத் தக்கவாறு எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அதை நம் மனமானது தானாக இழுத்துக் கொள்ளும். நம்மை தயார் செய்து கொள்ள நல்ல தன்மை, ஏற்பு சக்தி (Receptivity) மட்டும் தான் நமக்கு வேண்டும். அதற்கு நம்மை நம் சிந்தனை ஆற்றல் துணை கொண்டு மனதை தயார் படுத்தி அவ்வுயர்ந்த நிலைக்குத் தகுதியாக்கிக் கொள்ள குருவின் மூலம் முறையாக கற்றுக்கொள்ளப்படும் உளப்பயிற்சியாகிய தியானப் பயிற்சியின் (Sky Kundalini Yoga) மூலம் தான் சாத்தியமாகும். அவ்வளவு தான்".
.

"ஆகாசம் சுழலும் அலை, இயங்கும் பிரம்மம்;
அதிலிருந்து எழும் விரிவு அலைஅழுத்தம்
ஆகாசத் துகள் ஒன்றை ஒன்று மோதும்,
அது திரும்பும், சிதறும், ஊடுருவும் மேலும்
ஆகாச அலைஇடையே முன்பின் ஓடும்
அவ்வைந்து வகை இயக்கம் அனைத்துமான
ஆகாசத் துகள்களிலே பதிவு ஆகும்
அப்பதிவே எப்பொருளின் தன்மை ஆகும்."
.

"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்;
உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை;
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்;
ஒரு தொகுப்பில் கோடானகோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
உண்டாகும் விரிவுஅலை சீவகாந்தம்
உயிர்அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
உண்மைசிவம் உணர்வதுவே மனம்ஆம் காணீர்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

1 கருத்து: