Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஞானமும் - அரசியலும்


"இன்றுள்ள நிலையில் தத்துவத் தெளிவு பற்றிய "ஞானம்" என்னும் துறையும், பொருளாதாரம், ஒழுக்கம் இவற்றைப் பற்றிய சமுதாய நிர்வாகமாகிய "அரசியல்" என்ற துறையும் இரண்டும் தூய்மை பெறல் வேண்டும். இவ்விரண்டில் எதைக் கொண்டு எதனைத் தூய்மைப்படுத்துவது? ஆட்சி சட்டங்களைக் கொண்டு "ஞானம்" என்ற துறையைத் தூய்மைப்படுத்துவது அரிது....
.

விஞ்ஞான அறிவு மிகுந்துள்ள இக்காலத்தில் தத்துவ ஞான விளக்கத்தைப் பரவலாக்கி, மக்கள் அறிவையும் பண்பாட்டையும் உயர்த்தி, அதன் மூலம் அரசியலைத் தூய்மைப்படுத்துவதுதான் சிறந்த முறை. தாமதமான போதிலும் நிச்சயமாக பயனளிக்கத்தக்க எளிய உயர் முறை. எனவே ஆன்ம ஞானம் உலகெங்கும் மக்களிடையே பரவுதல் வேண்டும்; பரவச் செய்தல் வேண்டும். ஆகவே அறிவையறிந்து அறவழி பிறழாது வாழும் 'மெய்ஞ்ஞானத்தின்' மூலமே நாம் "உலக நலம்" காண முயற்சிப்போம்".
.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் "மனவளக்கலையைக்" (Simplified Kundalini Yoga) கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மனம் ஒடுங்குகிறது, அடங்குகிறது, அறிவு நுட்பம் பெருகுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல் அறிவு நுட்பம் இவை கிடைத்துவிட்டால் அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும். எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும்கிட்டும்."
.
ஞானமும் அரசியலும் :
"அரசியல் கொந்தளிப்பால் மக்கள் வாழ்வு
ஆன்மிக நெறியை விட்டகன்று போச்சு;
அரசேற்ற சிலருக்குப் பயந்தொடுங்கி
அறிவுடையோரும் அடிமை வாழ்வை ஏற்றார்;
அரசு முறைத் தூய்மைபெற சிற்றூர் மக்கள்
அறிவு பொருள்நிலை கடமை உயர்த்த வேண்டும்,
அரசாட்சி மூலம் பின் ஆன்ம வாழ்வை
அடையலாம் அறிஞர்களே வாரீர் சேர்வீர்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக