Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 6 ஏப்ரல், 2015

"கிரகண நாட்களில் உண்ணாநோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறார்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன? கிரகணம் முடிந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்?"

சந்திரகிரகணம்" பற்றி மகரிஷியிடம் அன்பரின் கேள்வி :-...
----------------------------------------------------------------------------------------


 .
மகரிஷியின் பதில் :-
------------------------------
"ராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் போது நம் உடலில் உள்ள இரசாயனமும் வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம் போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
.
ஆகவே இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களையும், நேரத்தையும் விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் Immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போலத்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்துவிட்டுச் செய்வது ஒரு சடங்குதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக