Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 4 ஏப்ரல், 2015

"மகரிஷி அவர்களே, எண்ணமற்ற நிலை தான் யோகம். எனவே சில தியான முறைகளில் மனத்திலிருந்து எண்ணங்களை அகற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தங்களது எளிய முறை குண்டலினி யோகத்தில் அவ்வாறு எண்ணங்களை மனதில் இருந்து அகற்றுவது பற்றி கூறப்படுவதில்லையே? ஏன்?


மகரிஷியின் பதில் :-
-----------------------------
"சாதாரணமாக சாதகன் மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத காரியம். தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்குபடுத்துவது தான். அவ்வாறு ஒழுங்குபடுத்தல் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் சாத்தியமான ஒன்றே.
.
இயல்பாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சி வயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மலை நீரானது புவிஈர்ப்பு விசைகேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழை வரும் போது அது பழைய பாதையையே சேரும். அது அதனுடைய இயல்பு.
.
மனதின் தன்மையும் அது போன்றது தான். ஆனால் எளிய முறை குண்டலினி தியானத்தில் (Simplified Kundalini Yoga) உயிர் மேல் மனம் வைத்து நிற்கப் பழகுவதால் மனம் உயிரில் ஒடுங்கி மன அலை சுழலில் விரைவு குறைந்து எண்ணமெழாத நிலை தானே கிட்டும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலமாகும். ஆனால் இடையில் மனந்தளராமலும் முயற்சியைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்.
.
எண்ணத்தை அகற்றும் முயற்சியானாலும் மனம் அதோடு உறவாடிக் கொண்டே இருப்பதால் எண்ணத்தை அகற்றுவது என்பது இயலாது."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
******************************************************************************
.
"மன அலைச்சுழல் விரைவை (mind frequency) குறைத்து
நுணுக்கமான அமைதி நிலைக்கு மனதை பழக்க,
மனம், உயிர், மெய்(Truth) ஆகிய மறைபொருட்களை
உணர்ந்துகொள்ள - உயிர்ச்சக்தி (Life Force) யின் மேல்
மனம் வைத்துப் பழகும் (Energy Meditation) எளிமைப்படுத்தப்பட்ட
குண்டலினி தவத்தால் (Simplified Kundalini Yoga) தான் சித்தியாகும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக