Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

இயற்கை / தெய்வ சக்தி / அருட்பேராற்றல் / பிரபஞ்ச சக்தி :

"இறை" என்பது தெய்வ நிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல், "தெய்வம்" என்பது அரூபமான "பேராதாரச் சக்தி". மாபெரும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலன்களைக் கொண்டு காலம் (Time), தூரம் (Distance), வேகம் (Force), பருமன் (Volume), என்ற நான்கு அளவைகளாலும் கணிக்க முடியாததும், அறிவு (Consciousness) புலன்களின் மூலமாகத் தேடும்போது இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும் போது உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மை நிலை எதுவோ அதுவே 'தெய்வம்' என்று வழங்கப்படுகிறது.
.

Nature is identified as Unified Force. The source of all forces - இயற்கை என்பது எல்லா அற்றல்களுக்கும் அடிப்படையான மூல ஆற்றல். "Unified Force" - ஒருங்கிணைப்புப் பேராற்றல் - இது விஞ்ஞானிகளின் வார்த்தை. இதையேதான் தத்துவ ஞானிகள் எல்லோரும் தெய்வம், பிரம்மம், கடவுள் என்கிறார்கள்.
.

"எல்லாம் வல்ல ஆதியான, எங்கும் நீக்கமற நிறைந்த மெய்ப்பொருளாகிய வெட்டவெளியின் நுண்ணியக்க ஆற்றலே 'பரமாணு' என்னும் சிறப்பாற்றல். இப்பரமாணுவே பேரியக்கத் தொடர்களத் தோற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படையான மூலக்கூறு. இக்கூறு பல சேர்ந்த ஆற்றல்தான் அணு (Atom) எனப்படுகிறது. இவ்வணுக்கள் பல இணைந்த இயக்க ஆற்றல் பேரணு அல்லது அணுத்திறள் (Molecule) எனப்படுகிறது. இவ்வணுத்திறள்கள் கூடிய தோற்றங்களே பேரியக்கத் தொடர்களாக விளங்குகின்றது. மெய் (Truth) என்னும் தெய்வநிலையின் ஆற்றலாக இருப்பதால் இவ்வாற்றலே "உயிர்" என அழைக்கப்படுகின்றது. பொருளைச் சிவமெனக்கொண்டு அதன் ஆற்றலாகிய "விண்" நிலையைச் சக்தியெனவும் வழங்கப் பெறுகின்றது. இந்த நுண்ணியக்க மூலக் கூறுகள் நெருங்கி இயங்கும் விரிந்த ஒரு தொடர்களமே மற்ற தோற்றங்கள் யாவும் இயங்கவும் முடியவும் அடிப்படையான பேராற்றல் களம். இதுவே பிரபஞ்ச காந்த களம் (Universal field). இதனை பேரான்மா என்றும் பேருயிர் என்றும் வழங்குகின்றோம்"
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக