Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 22 டிசம்பர், 2015

மகரிஷி அவர்களின் சில கவிகள்

"ஆண்டுதோறும் 'மார்கழி' மாதம் தினமும், மகரிஷி அவர்களின் துணைவியார் 'அன்னை லோகாம்பாள் அவர்கள்' வீட்டின் முன் கோலமிடும்போது, கோலத்தை சுற்றி கோலமாவால் கவி எழுதுவதற்காக, மகரிஷி அவர்களால் 1953ம் ஆண்டு தொடங்கி சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து மார்கழி மாதம் நாள்தோறும் தேதியிட்டு சொல்லப்பட்ட கவிகளில் அன்பர்களின் சிந்தனைக்காக சில கவிகள் :
.
இயல்பும் - உயர்வும் : (22-12-1953)
....
"அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு".
.

அன்பின் செயல் : (22 - 12 - 1954)
"அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம்
அன்பின் செயலாகும்."
.
மனிதன் ஆற்றல் : (22-12-1955)
"இயற்கையால் விளைதுன்பங்கள் போக்கிட,
முயற்சித்து, அணுமுதலண்டங்கள் நிலைகண்டான்.
பயிற்சியால் புவி வாழ்வை மேலாக்கிட,
செயற்கைப் பொருள்பல செய்தான் மனிதனே."
.
குறை காண வேண்டாம் : (22-12-1956)
"பறை ஒளியால் சங்கீதம்
பயனற்றுக் காண்பதைப் போல்,
குறை காண்போர் அறிவில் நற்
குணங்கள் பயனற்றிருக்கும்."
.
அன்பு வளர : (22-12-1957)
"பொருளாதாரத் துறையில் ஏற்றத் தாழ்வை
போக்கிவிட்டால் கற்பனை பேதங்கள் போகும்,
அருளாதாரத் துறையில் அறிவு செல்லும்,
அன்பு வளரும், மனிதர் வாழ்வு சீராம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
("மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக