Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 3 நவம்பர், 2014

சுவாமி ஜி ! உடலை விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க(Immununity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?

தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலை இயக்கத்திற்கு கொண்டுவர வேண்டும்....
.

.
Soul attachment என்று சொல்ல்க்கூடிய உடலைவிட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களிடம்தான் வந்து சேர முடியும். எனவே,
,

,
மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்கு குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக்கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த்தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதை தடுத்துவிட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.
.
.
அதனுடன் மனத்திலே பயம் இருக்கக்கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
.
.
நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டேயிருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு உடல் விட்ட ஆவியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது.
.
.
அப்படித் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்புகொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக்கூடியதொரு விகாரமான ஊருவம் நமக்கு கண்ணாடியில் தோன்றக்காண்போம்.
அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக்கூடாது என்பார்கள்.
.
.
.
அதிகமான வாசனைத்திரவியங்களை இரவிலே நாம் பூசிக்கொண்டால் அதன்மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.
.
.
இது போன்றதொரு காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக்கொண்டு வெளியே போகக்கூடாது என்பார்கள். அவற்றையெல்லாம் நாம் கடைபிடித்துவந்தால் உடல்விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.
.
.
அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிக்குறியவர்கள் நல்ல எண்ணமும் , தவ ஆற்றலும் உடையவராக இருந்து, அந்த நிலையிலேயே உயிர்விட்டவர்களாகவும் இருந்தால் தங்கள் ஆன்மீக மேம்பாட்டை பூர்த்திசெய்துகொள்வதற்காக அவர்கள் நம்முடன் இணைந்து நமக்கு நன்மையை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.
.

.
ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.
.

வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக