Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

விளைவிலே தோற்றமாக வருவது இறைநிலையே

இறைநிலையே எல்லா இடத்திலேயும் , எந்தச் செயகளிலேயும் அடங்கி மறைமுகமாக இருந்து கொண்டு , செயலுக்குப் பிறகு விளைவு, செயலிலிருந்து விளைவாக வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது . இறைநிலையை எந்த நேரத்திலும் மறக்க முடியாது.

 "மறைபொருளாக " புலன்களுக்கு எட்டாமல் எங்கும் எதிலும் ஊடுருவி நிறைந்திருக்கும் இறைநிலை, மனிதன் செய்யும் செயல்களின் செயலின் விளைவாகப் புலன்களுக்கு எட்டக் கூடிய நிலையில் வெளிப்பட்டு "விளைவாகக் " காட்சியளிக்கிறது.


மனிதன் ஆற்றும் செயல்கள் அவனது எல்லை கட்டிய அறிவின் ஆட்சிக்கு உட்பட்டவை. ஆனால் செயலுக்கு விளைவை தரக்கூடிய இறைநிலையோ எல்லையற்ற ஆற்றலுடையது. எந்தச் செயலும் இன்ப துன்ப விளைவுகளைத்தரும் என்ற இயற்கை நியதியை மறுக்க முடியாது . மறக்கவும் கூடாது .


இறைநிலையும் தானும் ஒன்றாக இருக்கக் கூடிய உண்மை நிலையை அறியாத முன்னம் செய்த தவறுகள் துன்பங்களை கொடுத்தன . ஆனால் இப்போது செயல் விளைவு நீதியை உணர்ந்த நிலையில் இறைநிலையே தானாகவும் இருக்கிறது என்ற விரிந்த நிலையிலே இனித் தவறுக்கு இடமில்லை. தவறுகளும் எழா .

-----அருள்தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக