Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புவியியல்

 அண்டங்களின் உற்பத்தி

இறைநிலை விளக்கத்தில், இறைநிலையின் தன்மாற்றமே இறைத்துகளின் தொகுப்பான விண் என்ற அணுவரையில் தோற்றமாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தோம். அவ்வாறு தோன்றிய அணுக்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன? இறைநிலை என்ற பெருவெளியை விட்டு வேறெங்கும் செல்ல முடிய...ாது.

ஆகவே, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலே அணுக்கள் பல தொகுப்பாகக் கூடிக்கூடி இயங்குகின்றன, அவை இயங்கும்போது அத்தொகுப்புக்களுக்கு ஏற்படும் திணிவுநிலையையொட்டி, அவற்றை விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து வகையாக முன்னோர்கள் விளக்கியிருக்கின்றார்கள். இந்த ஐந்து நிலைகளைப் பௌதீகப் பிரிவுகள் என்ற கருத்தில் பஞ்ச பூதங்கள் என்று விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றைக் கூறியுள்ளார்கள்.

அணுக்கள் கூட்டு இயக்கத்தை விஞ்ஞானிகள் பேரணு என்ற கருத்தில் “Element” என்று கூறி, அவ்வாறு உருவான கூட்டத்தில் எத்தனை அணுக்கள் அடங்கி இருக்கின்றனவோ அதற்குத் தக்கவாறு பெயரிட்டு மொத்தம் 92 பேரணுக்கள் (Elements) உள்ளன என்று கூறியுள்ளார்கள். நாம் பார்க்கும் எந்தத் தோற்றப் பொருளும், Elements என்னும் பேரணுக்கள் கூட்டமாகவோ, பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்க நிலையாகவோ தான் இருக்கும். அணு எந்த நிலை அடந்தாலும் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினால் அது தற்சுழற்சியோடு தான் இருக்கும். தற்சுழற்சி விரைவு உடைய இறைத்துகள்கள் கூடிய அணுவென்ற தொகுப்பு நிலையின் தற்சுழற்சி விரைவால், மேலும் மேலும் இறைத்துகள்களுக்கு விலக்கும் வேகம் கூடுகிறது.

அதனால் இறைத்துகள்கள் எப்பொழுதும் ஒரு அணுவை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கும். அதே போன்று, தற்சுழற்சி விரைவில் மந்தம் ஏற்படும்போது மேலும்,மேலும் துகள்கள் கூடிக்கொண்டும் இருக்கும். இவ்வாறு எந்த அணுவும் தனது நிலையில் ஒரே மாதிரியாக தொடர்ந்து இருக்க முடியாது. இந்த நிகழ்ச்சி அணுக்களின் தொகுப்பான எல்லாத் தோற்றங்களுக்கும் பொதுவாகும்.

அணுக்களிலிருந்து வெளியேறும் இறைத்துகள் என்பது என்ன? காந்தம் தானே. ஆகவே எந்தப் பொருளிலும் காந்தம் என்பது பாய்மப் பொருளாக நிறைந்திருக்கிறது. இறுக்க ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் செயல்படும் நிலையில்தான் எந்தப் பொருளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே சிறிய தோற்றப் பொருட்களிலும், பெரிய பெரிய அண்டங்களிலும் எப்பொழுதுமே காந்தமென்ற பேராற்றல் சுழன்று இயங்கிக் கொண்டே இருக்கும்.

இத்தகைய சிறப்பு ஆற்றல் சிறிய பொருளிலும் கூட, அது எந்த அளவில் நுண்மையானதாக இருந்தாலும், பொதுவான நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இறையாற்றலின் பெருமையால் காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்குத் துல்லிய சமதளச் சீர்மை (Specific Gravity) என்று வழங்கக்கூடிய ஒரு இயக்க நியதி ஏற்படுகின்றது. இதனால் காந்த ஆற்றல் எங்குச் சுழன்று கொண்டிருந்தாலும் Specific Gravity என்ற இறைநிலையின் இயக்க நியதியால் அந்தக் காந்த அலையின் மையத்தில் ஒரு திணிவு நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு ஒரு சிற்றுருவத்தில் எற்படும் காந்த ஆற்றலின் திணிவு நிலை “கருமையம்” என்ற ஒரு சிறப்பு நிலையாக உருவாகி, அதிலுள்ள எல்லா அணுக்களையும் சேர்த்துக் கொண்டு இயங்கும்போது இந்தக் கருமையமே ஐயுணர்வுகளுக்கும் மையப் பொருளாக இருந்து கொண்டு சிறப்படைகிறது. அது இயங்கும் தோற்ற உருவத்தை “சீவன்” என்ற சிறப்பு நிலைக்கு கொண்டு வருகிறது. எத்தகைய சிற்றுருவமானாலும் அதற்குக் கருமையம் அமைந்து விட்டால், அதற்கு முன்னம் சடப்பொருளாக இருந்த அந்த உருவம் சிறப்பு இயக்கம் பெற்றுச் சீவன் என்ற நிலைக்கு வருகிறது.

இவ்வாறான சிற்றுருவங்கள் கிருமிகள் என்றும், நுண்ணுயிர்கள் என்றும் பேசப்படுகின்றன. இத்தகைய உருவங்கள் சீவன் என்ற சிறப்புப் பெற்று ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் பெருகி இருக்கின்றன. எவ்வாறு இருந்தாலும், அனைத்துக் கிருமிகளும் காந்த ஆற்றலின் தன்மாற்றம் தானே! இந்தச் சீவகாந்த ஆற்றல் கலப்புறும்போது ஒவ்வொரு சிற்றுயிரும் தன்மையில் மாற்றம் அடைகிறது.

அம்மாற்றம் வித்தின் வழியே சந்ததி தொடர்பாக வளர்ச்சி அடைந்தும், பெருகியும் வரும்போது சிற்றுயிர்கள் எண்ணிறந்த கோடியாக பெருகிவிட்டன. இந்த நிலையில் ஒரு தாவரத்தின் பழத்தில், அதன் விதையில் உருவாகும் சிற்றுயிர்கள்தான் புழுக்கள் இன்ற பெயரோடு பெருகி உள்ளன.


எந்த தாவரத்திலிருந்து ஒரு புழு தோன்றினாலும், அது தனது முழு ஆற்றலான திரவ நிலையைக் கொண்டு ஒரு கூடு போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது.

இத்தகைய கூடுகள், பல புழுக்கள் மீது அமைந்து இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாகக் கூறினால், பட்டுப் புழுக்கள் மீது அமையும் கூடுகளைப் (Cocoons) பார்க...்கிறோம். அந்தக் கூட்டுக்குள்ளாக குடியிருக்கும் புழு ஒரு தியானம் போன்ற முறையின் மூலம் மேலும் மேலும் வலுப் பெற்று, அதற்குப் பறக்கும் திறமையை அளிக்கும் இறக்கைகள் முளைத்துவிடும். இந்தப் பருவநிலையில் தனது கூட்டையே தன் வாயினால் கடித்துப் பொத்தல் செய்து கொண்டு அந்த உயிரினம் வெளியேறிவிடும்.

இப்பொழுது அதற்கு பறக்கும் திறமை வந்துவிட்டாலும், அதன் இறக்கைகள் போதிய வலுப்பெற்றவை அல்ல. இதனால் பெரும்பாலான சீவ இனங்கள் சிறிது காலம் பறந்து இறக்கைகளை இழந்துவிட்டு, பூமியில் விழுந்து ஊர்வனவாக வாழத் தொடங்கும்.

இந்த நிலையில் அதற்கு கால்கள் ஏற்பட்டு, எண்ணிக்கையில் பெருகி அந்த சீவ இனம் ஒன்றொடு மற்றது இன உறவு கொண்டு, வேறு உருவம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும். இவ்வாறு எண்ணிக்கையில் பெருகி உள்ளவைதான் அனைத்து ஊர்வன சீவன்கள் ஆகும். சில சீவன்கள் இறக்கைகள் வலுப்பெற்று மேலும் மேலும் தொடர்ந்தியங்கி, அவை இனக்கலப்பால் பெருகி, வளர்ச்சி பெற்று, பல்வேறுபட்ட பறவை இனங்களாக விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதே போன்று நீரில் வாழும் உயிரினங்களும் பல எண்ணிக்கையில் பெருகிச் சிறப்புற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊர்வன பிராணிகள் தங்கள் பெருக்கத்தினால் பலவகையான நடப்பனவாகி, கால்களின் எண்ணிக்கை குறையக் குறைய இனங்கள் பலவாகி, கடைசியில் மனிதன் என்ற உருவத்திற்கு வந்துவிட்டன.

ஒரு சிற்றுயிரிலிருந்து மனிதன் வரையில் பெற்ற மாற்றங்கள் உடல் வரையில்தான் பேதப்படுகின்றன. ஆனால் சிற்றுயிரில் அமைந்த கருமையம் காந்தக் களம் ஆகையால், அந்த சீவன் எத்தனை உருவங்கள் மாறினாலும் அவற்றின் அனுபவங்கள் அனைத்தும் அலைவடிவில் சுருங்கிக் கருமையத்தில் தரமேன்மையாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு சிற்றுயிரிலிருந்துதான் ஆயிரக்கணக்கான உருவ மாற்றங்கள் பெற்று வாழ்ந்து வருகின்றன.

அதற்கு ஏற்றமாதிரி கருமையம் அதன் அமைப்பில் தக்கபடி மாற்றம் பெற்று, கடைசியில் மனிதன் என்ற சிறப்பாக அமைந்து விளங்குகிறது. இதனால் ஒரு மனிதனிடம் அமைந்துள்ள கருமையத்தில் உலகில் தோன்றி வாழுகின்ற அனைத்து சீவராசிகளின் தன்மைகளும் குணங்களாக அமைந்துள்ளன. எனவே இறைநிலையானது சிற்றுயிரிலிருந்து தன்மாற்றமடைந்த கோடிக்கணக்கான சிறப்புகளில் ஏற்பட்ட இயக்கச் சிறப்புகள், மனத்தால் உணர்ந்த அறிவின் சிறப்புகள், அனைத்தும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கமாக அமைந்துள்ளன.

எனவே மனிதனின் கருமையத்தில் பல்லாயிரம் சீவராசிகளின் குணங்களும் சுருக்கமாக அமைந்திருக்கின்றன. காந்த ஆற்றலுக்கு அது இயங்கும்போது ஏற்படும் சிறப்புநிலையை சுழல்விரைவு (Frequency) என்று கூறுகிறோம். மனித மனத்தின் சுழல் விரைவுகள் வேறுபடும்போது சிலசமயத்தில் கருமையத்தில் அமைந்துள்ள எந்த சீவ இனத்தின் குணங்களும் வெளிப்படலாம். மனிதனுடைய வாழ்க்கைத் தரமே மற்ற சீவன்களைவிடச் சிறப்பில் வேறுபட்டு இருப்பதால் அனைத்து சீவராசிகளின் குணங்களும் அடிக்கடி வெளிப்பட முடியாது. சில உயிர்களின் குணங்கள் மனித இன மனதுக்கு அதன் சூழ்நிலைகள் ஒத்து வரும்போது அந்தந்த சீவராசிகளின் குணங்களும், எண்ணங்களும் செயல்களாக வெளிப்பட்டுவிடும்.

மனிதன் இருப்பான்; சிலசமயம் பாம்பைப் போல் சீறுவான், சில சமயம் புலியைப் போல் பாய்ந்து பிறரைத் தாக்குவான். இவ்வாறு பல்வேறு மனநிலைகளிலும், செயல் முறைகளிலும் ஒவ்வொரு மனிதனும் அமைந்து, சுழ்நிலைகளுக்கு ஏற்ப மன, உடல் இயக்கங்கள் நடைபெறக் காண்கிறோம். இந்த இடத்தில் மீண்டும் சிந்திப்போம்.

மனிதன் திடீரென்று இயற்கையில் தோன்றிவிடவில்லை. இறைநிலையில் அமைந்திருக்கும் தவறில்லாத இயக்க முறையால் ஒரு சீவனிலிருந்து இன்னொரு சீவனாக மாற்றம் பெற எண்ணிறந்த ஆண்டுகள் சென்று விடுகின்றன. இவ்வாறு உலகில் உயிரினம் சிற்றுயிர்களாகத் தோன்றிப் பெருத்த உடலும், அதற்கு ஏற்ற செயல்களும் அமையும் பல்வேறு வியப்புறத் தக்க சீவ இனங்கள் உருவாகி அத்தனையும் இயற்கை வளத் தோடு, முறையாக இயங்கிக் கொண்டிருக்கும் உண்மையினை அறிவதே இறையுணர்வும், பிரபஞ்ச சரித்திரமும் ஆகும்.

எனவே, ஏதோ ஒரு ஆற்றல் உலகைப் படைத்து பாதுகாப்பும், பராமரிப்பும் அளித்து வருகிறது என்ற தெளிவை விட, இறைநிலையே தன்மாற்றம் பெற்று, பிரபஞ்சத்தில் காணும் பொருட்களாகவும், அண்டங்களாகவும், கோடி கோடியான உருவங்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குவதே இந்தப் பரிணாமச் சரித்திரம்.

- வேதாத்திரி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக