Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கேள்வி: கோபத்தை அடக்கி வாழ்ந்தால் கோழை என்று எண்ணி விடுவார்கள். இதை தவிர்க்க என்ன வழி?


 வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
கோபம் கொள்வது தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிலே இருந்து எழக்கூடிய குழப்பம் தான் இது.
சினம் தவிர்த்த எவரையும் கோழை என்று உலகம் கூறவில்லை. மனோ வல்லமை பெற்றவன் என்று இதயப்பிரியன் என்றும் இதுவரையிலே உலகம் கூறி வந்திருக்கிறது.
சினம் கொள்வது வீரமென்ற ஒரு மாற்றுக் கருத்தை, தவறான கருத்து நாம் பதித்து கொண்டு இருக்கும் போது இந்தக் கருத்திலே இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது ,அவரவர் அம்மாதிரி எண்ண இடம் இருக்கின்றது.

கோழை என்று பிறர் நினத்தாலும் கூட சரி, நான் சினம் கொள்ளமாட்டேன். சினத்தின் கேட்டினை நான் அறிவேன். ஆகவே சினம் கொள்ளமாட்டேன்.
அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன் என்ற ஒரு திண்மையோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் செய்து பாருங்கள்.
உங்களோடு தொடர்பு கொண்டவர்களை நீங்கள் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்று எண்ணமாட்டார்கள் வீரர் என்றே போற்றுவார்கள்.
____

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக