Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 30 டிசம்பர், 2013

கருமையம் எனும் தெய்வீகப் பெட்டகம் :



உடலியக்கத்தாலும் மன இயக்கத்தாலும் ஏற்படும் சீவகாந்த ஆற்றலின் தாக்கங்கள் அனைத்தும் உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலில் கலந்து சுருங்கிக் கருமையத்தில் இருப்பாகி விடுகின்றன. கருமையத்தில் அமைந்திருக்கும் பதிவுகள் அவ்வப்போது மூளைச் செல்கள் மூலம் விரிந்து எண்ணங்கள் என்னும் அகக் காட்சிகளாக மலர்கின்றன. எனவே, கருமையம், மூளை, புலன்கள், இம்மூவகையும் வான்காந்தக்களத்தின் ச...ிறப்பு மிக்க உயிரினங்களின் செயல்பாடுகளாகும். கருமையத்தில் ஒருபதிவு ஏற்பட்டால் அது எப்போதும் அழிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அது ஒரு பதிவேடு போல உதவுவதோடு அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபு வழிப் பதிவுகளாகச் சிறுது கூட மாறாமல் ஜெராக்ஸ் பிரிண்ட் போல பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வரும்.

மனித வாழ்வில், எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று வகைச் செயல்கள் உள்ளன. அவற்றிற்கேற்ற விளைவுகளும் உண்டு. மீண்டும் மீண்டும் அவற்றையே செய்ய எண்ணமும் செயல்களும் எழும். இவையாவும் பதிவுகளாகி அறிவாட்சித்தரமாக அமைந்து விடும். அறிவாட்சித் தரமே ஒருவர் வாழ்வில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய அனைத்தையும் அளிக்கவல்லது. எனவே ஒவ்வொருவரும் தனது கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எண்ணம் ஆராய்தல், என்னும் தற்சோதனைப் பயிற்சி மூலமும், உடலில் உள்ள நோய்கள் மூலமும் கருமையத்திலுள்ள களங்கங்களை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். பிறகு அந்தக் களங்கங்களைத் தூய்மை செய்வதற்கு ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு, அப்பயிற்சிகளின் வழியே பெற்ற விளக்கத்தின் படியே வாழ்க்கையை நடத்தி வரவும் வேண்டும். பொதுவான மனிதகுல நீதியான எவருக்கும் துன்பம் எழாத முறையில் செயல் புரிந்து ஒழுக்கமாக வாழ்வதோடு பிறர் துன்பங்களை முடிந்தவரை தனது உடல் பொருள் ஆற்றல் இவற்றைக் கொண்டு போக்கி வரவும் வேண்டும். கருமையம் எனும் தெய்வீகப் பெட்டகத்தை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி நமக்கு உண்டாக வேண்டும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக