Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?



சுவாமிஜியின் பதில் :

 மனித உடலில் electrical, mechanical and chemical energy அவ்வப்போது மாறும். கிரகங்களுக்கு ஏற்றவாறு உடலின் சருமத்தில் சில ரசாயன மாற்றங்கள் உண்டாகும். அதற்குதான் கைரேகை, மச்சம் என்று சொல்வார்கள். இவைகள் எல்லாம் என்ன எடுத்துக் காட்டுகின்றன என்று பார்த்து, கிரகங்களில் இன்னின்ன அழுத்தம் இருக்குமேயானால் இன்ன இட...த்தில் மச்சம் வரும் என்று கண்டுபிடித்தார்கள். அந்த ரேகை இப்படித்தான் வரும் என்பதையும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, அந்த கிரகங்களுடைய வேறுபாட்டினாலும் கைரேகை மாறிக் கொண்டே வரும். அதைக் கொண்டு பலன் சொல்வார்கள்; ஆனால் அவ்வளவும் சரியாக இராது. இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அவ்வளவையும் நுண்மையாகக் கணிக்க முடியாது. கூறப்படும் ஹேஸ்யங்கள் ஓரளவுதான் சரியாக இருக்கும்.

ஒரு கை ரேகைக்காரன் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து என்னுடைய ஆயுள் 58 வயது வரை தான் என்று சொன்னான். நான் கேட்டேன், "எதைவைத்து 58 வயது என்று சொல்கிறாய்?" என்று. இங்கு வந்து ஒரு கட்டு இருக்கிறது, அப்படி இப்படி என்றான். "சரியப்பா, எனக்கு இருக்கிற பணியைப் பார்க்கிறபொழுது இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கவேண்டும். ஆயுளை மாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன், நீ ஏதாவது வழி சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். "அதெல்லாம் இல்லைங்க, உங்களுக்கே தெரியும். நீங்களாகத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, நான் இருப்பதைத்தான் இப்பொழுது கணக்குப் போட்டுச் சொன்னேன்," என்று சொன்னான். தவத்தினாலோ (Meditation) அல்லது நீங்கள் உணர்ந்த ஒரு தன்மையினாலோ உங்கள் ஆயுளையே நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நாம் ஏற்கெனவே செய்ததன் விளைவாகத்தான் இன்றைய நிலை என்கிறபொழுது, இன்று முதல் நாம் செய்வதன் விளைவாக எதிர்காலம் அமையும். நாமே உருவாக்கக்கூடிய ஒன்றுக்கு கைரேகைக்காரனையோ கிளி ஜோசியனையோ நம்பிப் பணத்தையும் பொழுதையும் விரயமாக்குவானேன்!.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக