Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 26 டிசம்பர், 2013

செயலிலே விளைவாக இருப்பது தெய்வ ஒழுங்கமைப்பே:




தெய்வநிலையே தன்மாற்றத்தால் இறைத்துகளாகி, அவை கூடி அணுவாகி அதுவே நுண்ணியக்கமாகி , அதனுடைய கூட்டால் பிரபஞ்சமாகி, அதனுடைய செயற்கையால் பல கோடி உயிரினங்கள் ஆயிற்று . எல்லாமே தெய்வமாக, தெய்வத்தினுடைய பிரதிநிதியாக இருப்பதால் இறைநிலையின் தன்மைகள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பொருட்களுக்கும், உயிரினங்களுக்கும் இருக்கின்றன .

ஒவ்வொரு செயலிலேயும் இறைநிலை அழுத்தம், ஒலி ,ஒளி ,சுவை , மணம் இவையாக உருவெடுத்து வெளிப்பட்டுப் பயனாக விளைகின்றது. செயலின் மூலமாக விளைவாக வருகிறது. அவரவர்கள் செயலிலே விளைவாக வருவது இறைநிலையினுடைய பிரதி பிம்பம் அல்லது உருவம். எனவே தனக்கு வேண்டுவது எதுவோ அதைப் பெறுவதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்ய வேண்டும் . தெய்வீக ஒழுங்கமைப்பை உணராமலோ உணர்ந்தும், அலட்சியம் செய்தோ அல்லது உணர்ச்சிவயப்பட்டோ துன்பம் விளையக்கூடிய செயலைச் செய்து விட்டால் பிறகு அந்த விளைவிலிருந்து தப்ப முடியாது....

"செயலிலே விளைவாக
தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப்
பரமனைப் பின்வேண்டுவதால்?"

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக