Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 4 டிசம்பர், 2013

நான்யார்?

"நான்யார்?" என்பதற்கு விடை கிடைத்தால் தெய்வத்தை அறியலாம், தெய்வ நிலை அறியலாம், மெய்ப்பொருள் என்பதை உணரலாம். அறிவு என்ன என்பது உணரப்படும்., ஆக அறிவை அறிதல், தெய்வநிலை அறிதல் பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாக உள்ளதை அறிதல் எல்லாமே ஒன்றுதான். இப்போது உங்களுக்கு இவ்வளவு பெரிய சிக்கலான விஷயத்தை எளிமையான வார்த்தைகளிலே விளக்கியிருக்கிறேன். இந்த வகையிலே விளக்கம் உங்களில் சிலருக்கு உடனே புரிந்துவிடும். சிலருக்கு விளங்கும்; ஆனால் பிடிபடாது. அதை மறுபடியும் மறுபடியும் ஆராய வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னர், ஏதோ சில விஷயங்களை "அது தான் கடவுள் என்று, "அது தான் உயிர்" என்று எண்ணி எண்ணி அந்தப் பதிவே அதிகமாக இருப்பதால், உண்மை என்பது தெரிந்தால் கூட, அது உடனே ஒத்துவராத ஒரு மயக்கமாக இருக்கிறது. ஒரு சிலருக்குப் புலன்கள் வழி மாத்திரம் தெரியும்; மற்ற சிந்தனைஆராய்ச்சி இல்லை. அவர்களுக்கு உடனே விளங்காது. ஆனால், எல்லோருக்குமே காலத்தால் விளங்கிவிடும் என்பது நிச்சயம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக