Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 31 டிசம்பர், 2013

கவலை

தப்புக்கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி, ஒழுங்கமைப்புக்கேற்றபடி அப்போதைக்கபோதே அளிக்கும் சரிவிளைவு எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்." ... கவலை என்பது உள்ளத்தின் கொடிய நோயாம். கணக்கு தவறாய் எண்ணம் ஆற்றலாம். கவலை என்பது வாழ்வில் சிக்கல் கண்டு மனம் திகைப்படையும் நிலையாகும். கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையைக் கணிக்க முடியாமல் போகும். சிக்கல் பெரிதாகத் தோன்றும் அதன் நுட்பம் தெரிந்து அவிழ்க்கின்ற திறமை குறைந்து போகும். தீர்க்க முடியாத சிக்கல் என்று எதுவுமே கிடையாது . தீர்க்கின்ற வழியைத் தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு. "திறக்க முடியாத பூட்டே கிடையாது. அதற்கான சரியான சாவியைக் கண்டு பிடிக்கத்தெரியாதவர் தான் உண்டு."

உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும் உயிரின் களங்கமாக விளங்கும் வாழ்க்கைச் சிக்கல்களும் கவலையாக மதிக்கப்படுகின்றன. உடலுக்காயினும் அல்லது மனத்துக்காயினும், சிக்கல்கள் வரும்போது அந்தச் சிக்கல்களைச் சந்திக்கப் போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம். கவலை எந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகிறது? நினைப்புக்கும் நடப்புக்கும் இடையே... வித்தியாசம் வரும்போது அச்சூழ்நிலையை மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதபோது அந்த மனநிலையைக் கவலை என்கிறோம். கவலை என்பது ஒருவகை உளநோய். தனது இயலாமையை உணர்ந்து, நினைந்து அல்லது கற்பித்துக்கொண்டு வருந்தி அமைதி இழந்து இயங்கும் மனோநிலைதான் கவலை.

திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும். வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள்தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை. தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக