Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 12 டிசம்பர், 2013

இன்று நிலவி வரும் குழப்பங்களையும், வேறுபாடுகளையும் முழுமைப் படுத்த வழி

மக்கள் குலத்தை நடத்துவதற்கு மூன்று தலைமைகள் தேவை என்பதை மறுக்க முடியாது.
 அவை. 
1) ஆட்சி, 2) மதம், 3) பொருள்துறை.
 இம்மூன்று துறைகளின் தலைவர்களும் ஒன்று கூடி, 'சிந்தனையாளர்கள் கருத்தரங்குகளை' நடத்த வேண்டும். அந்தக் கருத்தரங்கிற்குத் தலைவராக உள்ளவரிடம், இரண்டு வினாக்களைக் கொடுத்து மேற்சொன்ன தலைவர்களையெல்லாம் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு வினாக்கள் இவைதான்.

1) தெய்வம் என்பது ஒன்றா? பலவா?
2) ஒன்று என்று தீர்மானமானால் எந்தப் பேராற்றலைத் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளலாம்?
...
முக்கியமாக மனித குலத்திற்கு வாழ வழி காட்டிப் பாதுகாக்க வேண்டிய மதத் தலைவர்கள், இத்துறையில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று தலை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.
இறைநிலை என்பது மறைபொருள். புலன்களுக்கு எட்டாது. அறிவின் அலை நிலையாகிய மனச்சுழல் விரைவைப் படிப்படியாகக் குறைத்து, டெல்டா அலைக்கு அதாவது வினாடிக்கு ஒன்றிலிருந்து மூன்று சுழல் வரையில் மனம் வருகின்ற போது தான், மறைபொருள் விளக்கங்கள் கிடைக்கும். குண்டலினி சக்தியின் மீது மனம் வைத்து ஆழ்ந்த தியானப் பயிற்சி செய்பவர்கள் மாத்திரம்தான் இத்தகைய மனநிலைக்கு வர முடியும். ஆகவே இங்குள்ள மதத்தலைவர்கள், தத்துவஞானிகள் அனைவரையும் வேண்டிக் கொள்வது இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே ஒழிய, மனித குலத்தில் ஆன்மீகத் துறையில், இன்று நிலவி வரும் குழப்பங்களையும், வேறுபாடுகளையும் முழுமைப் படுத்த வேறு வழியே இல்லை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக