Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 16 டிசம்பர், 2013

முக்தி


 ஒரு மனிதன் சிந்தனை ஆற்றல் மிகுந்து பிறவித் தொடரை அறுத்து விட எண்ணுகிறான். முறையாக ஆசானிடம் அகநோக்குப் பயிற்சி (குண்டலினி யோகம்) பெற்று புலன்களை விளைவறிந்த விழிப்போடு ஆளும் திறமை பெற்று விடுகிறான். பின்னும் அறிவு மேலோங்கி நடுமனதில் பதிவாகியுள்ள பழிச் சுமைப் பதிவுகளை "துரிய நிலை" தவத்தாலும், அந்நிலையில் நின்று ஆராய்ச்சியாலும் மாற்றிக் கொள்ளுகிறான். "துரியாதீத" நிலையெய்தி மெய்ப்பொருளோடு இணைந்து நின்று நின்று, நிலை பேறு அடைந்து அறிவின் முழுமை பெறுகிறான். உயிர் உடலில் இயங்கும்போதே தெய்வ நிலைத் தெளிவும், பழிச் சுமை கழிவும் உண்டாகிவிடுகின்றன. அவன் உடலை விட்டு உயிர் பிரிந்தால் அது முழு விடுதலை விரைவு கொண்டு உடனே பேரியக்கத் தொடர்கள உயிரில் (Universal soul) கலந்து விடுகின்றது. இந்தப் பிரிவைச் சேர்ந்த முடிவுதான் "முக்தி" அல்லது "மோட்சம்" எனப்படும். "விடுதலை" என்றுதான் இச்சொற்களுக்கும் பொருள். அறிவின் முழுமைப் பேறடைய விரும்பும் மக்களுக்கு இத்தகைய உயிராற்றல் எப்போதும் "ஆன்ம ஒளி" தரும் பிரதிபலிப்பு ஆற்றலாக விளங்கும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக