Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 24 டிசம்பர், 2013

எண்ணத்தில் விழிப்பு நிலை



"ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டால் போதும் . மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று ".

"வெறும் எண்ணம் மட்டும் தானே நான் என்ன செயலிலா இறங்குகிறேன்?" என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்துவிடக் கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய் விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனத்தில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்து விடும் . அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம் ....

இன்னொன்று , செயலில் இறங்க மாட்டேன் என்ற நிதானத்துடன் ஒரு தீய எண்ணத்திற்கு இடம் கொடுத்தாலும், திரும்ப திரும்ப மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற வேட்பையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும் . இதைத் தான் "உள்ளத்தால் உள்ளலும் தீதே .." என்று கூறியுள்ளார்கள் .

எனவே அயரா விழிப்பு நிலையில் இருந்து நாம் நல்ல எண்ணங்களையே பதிய வைத்துக்கொண்டிருந்தால் அது உடல் செல்களிலும் பதிந்து நற்குணமாக மாற்றம் பெரும் .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக