Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 11 டிசம்பர், 2013

பிரம்மஞானம்

பிரம்மஞானம் என்பது மனிதகுல வாழ்வுக்கு மேன்மையை அளிப்பதும், சிறப்பைத் தருவதும் ஆகும். ஐந்து ஞானந்திரியங்கள் எனும் தொடு உணர்வு, சுவையுணர்வு, மணஉணர்வு, ஒளி உணர்வு கருவிகளாகத் தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவைகளுக்கும் - தொழில் செய்கருவிகளான கை, கால், வாய், பால்குறி, குதம் ஆகியவற்றிற்கும் அறிவை அடிமையாக்கிச் செயல்புரிந்து வாழும் வாழ்க்கையானது ஐயறிவுக்குட்பட்ட விலங்கின வாழ்வாகும். ஆறாவது அறிவை மன ஆற்றலோடு இணைத்துக் கொண்டு, ஐந்து உணர்கருவிகளையும், ஐந்து தொழில் கருவிகளையும் விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் ஆக்க வழிகளில் பயன்படுத்தி வாழும் நுண்ணறிவு வாழ்வே மனித இனத்திற்கு ஒத்ததாகும். இத்தகைய உயர் வாழ்க்கைக்கு இயற்கையை, அதன் ஆற்றல்களை, விளைவுகளை, மனிதன் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அடுத்து மனித உடல் அமைப்பையும், மனதின் ஆற்றல்களையும் தெளிவாக உணர்ந்து கொள்வதும் அவசியம் ஆகும். பிரம்மஞானம் எனும் பேரியக்க மண்டலம், மனிதன் என்னும் இரண்டு தத்துவங்களின் தோற்றம், இயக்கம் விளைவுகள் பற்றிய முழுமையான விளக்கம் மிகவும் அவசியம் ஆகும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக