Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 7 டிசம்பர், 2013

இறை நிலையை உணர

இறைநிலையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தே எல்லா வழுக்கல்களுக்கும் காரணம். உண்மையில் இறைநிலையே பிரபஞ்சமாக தன்மாற்றம் (Transformation) அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைநிலை வேறாகவும், பிரபஞ்சப் பொருட்கள் வேறாகவும் இருக்கின்றன என்பதே தவறான கருத்து ஆகும்.
இறைநிலையை சில அடையாளங்களோடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐம்புலனறிவோடு இயங்குகின்ற மனிதர்கட்கு இறை நிலையைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் எளிதில் பிடிபடா. என்றாலும், ஆறாவது அறிவு நிலையில் முதிர்ச்சியடைந்தவர்கள் பயிற்சியினால் (Meditation) இறைநிலையோடு கலந்து அதன் உண்மை நிலைகளை உணர முடியும்; உணர்ந்தும் உள்ளார்கள். அந்த அனுபவங்களை - அடையாளங்களாகக் காட்டி மற்றுமுள்ள மனித குலத்திற்கு அந்த அருட்பேராற்றலைப் பற்றி விளக்குவது எளிதேயாகும். சாதாரணமாக மனிதருக்குள் 'அறிவு ஆராய்ச்சி' நிலையில் சில வழுக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஆறாவது அறிவு இயங்கவில்லை என்றோ, குறைவாக உள்ளது என்றோ கருத்து அன்று. அறிவின் கூர்மையும், நீடித்த சிந்தனையும் மறைபொருட்களை ஆராய்வதற்கு மிகவும் அவசியம். எந்தப் பொருளைப் பற்றி உணர வேண்டுமானாலும் அந்தப் பொருளைவிட நுண்ணிய நிலையில் அறிவு இயங்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான உளப்பயிற்சி தான் "அகத்தவம்"(Meditation) ஆகும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக