Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 30 அக்டோபர், 2014

அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு பருவ வயது வந்தவுடந்தான் வித்துக்குழம்பு உண்டாகும். அதற்குமுன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது ? அதேபோல் முதுமை அடைந்ததும் விந்து சக்தி குறைந்துவிடுகிறது ; அப்போது உயிர்ச்சக்தியும் குறைவாக இருக்குமா ?

தாய் தந்தை விந்து நாதத்தைக் கொண்டேதான் குழந்தை தன் உடலைக் கட்டிக்கொண்டு வருகிறது. உடல் வளர்ச்சியோடு வ...ிந்துவின் அளவும் வளர்ந்துகொண்டே வருகிறது.. 3 வயதிற்குள் மூளையை முழுமையாக கட்டிக்கொள்ளும்.

சுமார் 12 வயது வரை உடலைக்கட்டிக்கொள்வதற்கே விந்து செலவாகும். மீதம் இருக்காது.
.

.
உடல் வளர்ச்சிக்கு செலவானது போக எந்த வயதில் விந்து உபரியாக வருகிறதோ அதுதான் பருவமடைதல் (Age Of Maturity) . மேல்மிச்சம் ஏற்படுகிறபோது கழிவு ஏற்படுகிறது.
.

அப்போதுதான் கீழே அணு அணுவாக முதுகுத்தண்டு வழியாக வந்து சுரப்பியில்(Sexual Gland) தங்குகிறது. அதுவரை அது மூளையிலேயே தங்கி இருக்கும்.
.
.
விந்து உற்பத்தி மூளையில் ; தங்குமிடம் கருமையம் என்னும் உடல் மையத்தில்.
.

விந்து நாதம் இணைந்த முதற்கொண்டு உயிர் பிரியும் வரைக்கும் - குழந்தைகளாக இருந்தாலும் - முதியவர்களாக இருந்தாலும் விந்தானது சீவகாந்த மின் குறுக்கால் (Short Circuit) கொட்டிப்போனால்; அதுதான் மரணம்
.
.
பருவ வயதிற்குள் குழந்தைகள் இறந்தால் மூக்கில், கண்களில், நீர் வரும்.
பெரியவர்களுக்கு பால்சுரப்பியில்(Sexual Gland) மின்குறுக்கு ஏற்படும்; விந்து நாதம் முறிந்து பிறப்புறுப்பு வழியே கொட்டிவிடும்.
.

எல்லோருக்கும் வாழ்வின் கடைசி வரை விந்து நாதம் இருக்கும். ஏழாவது தாதுவான விந்தின் உற்பத்தி இளம்வயதில் அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குறைவாக இருக்கும்; ஆனால் உயிரைத்தாங்கும் அளவு இருக்கும்.
.

வயது முதிர்ச்சியில் விந்துவின் அளவும், அதற்குத்தகுந்தவாறு உயிர்ச்சக்தியின் அளவும் குறையும். அதனால் தான் முதுமையில் பலவீனம் ஏற்படுகிறது, உறுப்புகள் செயலிழக்கின்றன.
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக