Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 17 அக்டோபர், 2014

அமைதியான வாழ்வுக்கு வழி காட்டும் வேதாத்திரியம்

அமைதியான வாழ்வே முழுமையான இன்பம் . பற்பல காரணங்களால் உலகில் அமைதி குலைந்துள்ளது. மனித இன வாழ்வில் அமைதி நிலவ வழி காணவும். அதற்கான செயல்களை செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே வேதாத்...திரியத்தின் நோக்கம்.

1. தனிமனிதன் வாழ்வில் அமைதி
2. சமுதாயத்தில் அமைதி
3. உலக நாடுகளுக்கிடையே நிலையான அமைதி

என்ற மூன்று வகையிலும் மனிதகுலம் அமைதியைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

தனி மனிதன் வாழ்க்கை அமைதியான நிலைக்கு வர வேண்டும். தனி மனிதன் சிந்தனையாலும் , திட்டமிட்ட செயல் திருத்தங்களாலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள எளிதாக இயலும் அதற்கு குண்டலினியோகமும் , தத்துவ விளக்கங்களும் உதவுகின்றன .

சமுதாய அமைப்பில் ஓர் உறுப்பினராக வாழும் தனிமனிதன் தன்னளவில் முழுமை பெற்றுவிட்டால் , மனதில் அமைதி பெற்று வாழலாம். அது நீடித்து சமுதாயத்தில் அமைதி நிலைக்க செய்யும்.

தனி மனிதனின் அமைதியைக் கொண்டே குடும்பமும், குடும்ப அமைதியைக் கொண்டே உலக அமைதியையும் காக்கப்படும். குடும்ப அமைதியே உலக அமைதிக்குப் பாலம் போன்றது. தனிமனித அமைதியே உலக அமைதிக்கு அடிப்படை .

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக