Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தவப்பயன் காப்பீர்


ஆன்மீகம் என்றாலே உயிர்ச்சக்தி, தவத்தைச் செய்து அமைதி நிலைக்கு வந்து பேரின்பம் எனும்
Ecstasy–ஐ அடைகிறோம். இந்தநிலை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் உணர்ச்சிவயப்பட்டோமேயானால் உயிர்ச்சக்தியானது அளவிலும் அழுத்தத்திலும் குறையும் உடலில் உள்ள அணு அடுக்கு அதிகமாகச் சீர்குலையும், அதேபோல் மூளையில் உள்ள அணு அடுக்கும் வெகுவாகச் சீர்குலையும். தவநிலையில் மனம் ஒன்றிப் பேரின்ப நிலையை அடைகின்றபோது சினம் கொள்ளாமலும், உணர்ச்சிவயப்படாமலும் பேராசை கொள்ளாமலும் இருக்க வேண்டியது அவச...ியம்.
சினம் கொள்ளாமல் இருப்பதற்கு எங்கேயோ செல்ல வேண்டியது இல்லை. நம்முடைய குடும்பத்திலேயே தாய், தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியவர்களிடையே சினம் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டால் போதும். எப்போதும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய தன்மைகளை ஏற்றிருக்க வேண்டும்.
பிறருடைய தவறைத் தவறு செய்தவுடனேயே சுட்டிக்காட்டாமல் நேரம் வரும்போது பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தவறு செய்த உடனேயே சுட்டிக்காட்டுவது என்பது வெந்த புண்ணில் ஊசியைச் செலுத்துவதுபோன்றது. ஏனென்றால் தவறு செய்தவர்களுக்கே தெரியும். நாம் இப்போது தவறு செய்து விட்டோம், என்று அப்போதே நாமும் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு தவறைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பினும்கூட அந்த நேரத்திலே பொறுமையுடன் அமைதிகாத்துப் பின்னர் ஆக்கரீதியாகச் செயல்பட வேண்டும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக