Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 19 ஜூலை, 2014

மனித மனம் அமைதி பெற :



மனித மனம் விலங்கினப் பதிவின் காரணமாக புலன்கள் வழியே செயலாற்றும் போது தனது உண்மை நிலையை மறந்து மயங்கி விடுகிறது .

இதனால் தன்முனைப்பு கொண்டு உணர்ச்சிவயப்பட்டு , மனத்தின் அலைச்சுழல் அதிகமாகி விளைவறியாது செயலாற்றி அதன் விளைவாக வாழ்வில் சிக்கல்களும் , துன்பங்களும் பெருக்கிக் கொள்கின்றன....

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செயலாற்றும் போது அச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுபட முடியாமல் , உணர்ச்சிவயமாகி தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை தரும் செயல்களை ஆற்றுகின்றன .இதனால் தீமை தரும் எண்ணங்களும் செயல்களுமான சினம், வெறுப்பு, பகை , வஞ்சம் என்ற அலைகளையே பரப்புகின்றன .

இயற்கையை அறியாத மன நிலையில் மனம் குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமானால் இயற்கையோடு அறிவை இணைந்து விரிந்து செயல்படும் போது மனித மனம் அமைதி அடைகிறது .

---அருள்தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக