Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 14 ஜூலை, 2014

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

விழிப்பு நிலை :

மயக்கத்திலேயே வாழ்ந்து பழகிய மனித மனத்திற்கு முறையான பயிற்சினால் தான் விழிப்புநிலை கிட்டும் . பயிற்சியினாலன்றி கிட்டாது . அதற்கு உயிரை உணர்ந்து , உயிரின் இருப்புநிலை உணர்ந்து கொள்ள வேண்டும். அகத்தவமே எண்ணம், சொல், செயல் மூன்றிலும் விழிப்பு நிலையை அளிக்கவல்லது .

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

1. விழிப்பு நிலையால் தனக்கும் பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் ஊரு ஏற்படுத்தாத வகையில் செயலாற்ற வேண்டுமென்ற அருளுணர்வு ஏற்படுகிறது .

2. அறம் இயல்பாக மலர்கின்றது. அறப்பண்புகள் உயர் பண்புகளாகின்றன.

3. விழிப்பு நிலையால் உயிராற்றலின் வீண் செலவு குறையும் .

4. தன்முனைப்பு நீங்கி, ஆறுகுண எழுச்சிகள் அடங்கி சீர்மை பெரும். பழிச்செயல்கள் விளையா . மனதிற்கு அமைதி கிட்டும். அறிவு நாளுக்கு நாள் தெளிவடையும்.

5. தன்னையே ஆய்வு செய்வதும், தெளிவு பெறுவதும், நல்வினை ஆற்றுவதும் இயல்பாகிறது. இதுவே விழிப்புநிலையின் முழுமை .

6. விழிப்பு நிலையோடிருக்கும் போது மனிதன் பேரறிவாக இருக்கவும், இயங்கவும்,வாழ்க்கையில் சிக்கல்கள் துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கி கொள்ளவும் முடியும்.

7. மனதையும் வாழ்வையும் கேடுறாமல் காத்துத் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் . தெய்வநிலையை உணர்ந்தும் கொள்ளலாம்.

----அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக