Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

இயற்கை சீற்றங்கள் எழ காரணம் என்ன?




சுவாமிஜி :

மக்களின் செயலுக்கான விளைவே இயற்கைச் சீற்றங்கள். அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்குரிய செயல்முறை இருந்தாலன்றி அமைதி கிட்டது. மனிதனே தனது செயல்களை உணர்ந்து திருந்தி தனக்கும், சமுதாயத்திக்க...ும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இயற்கை உலக மக்களுடைய எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மனிதனைத் திருத்த வேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையில் இயற்கைச் சீற்றம் தான் வரும். புயலோ,வெள்ளமோ, பூகம்பமோ ஏற்படும். சீவகாந்தத்தில் எந்த எந்த அலையிலே அழுத்தம் கொடுக்கிறோமோ அந்த மனநிலையோடு உள்ள எல்லா மக்களுடனும் எண்ணத்துக்குத் தொடர்பு உண்டாகிவிடும். அது காலத்தால் ஒளிரும்.

செயல்விளைவு நீதி உணராததே உலகத்துன்பங்களுக்குக் காரணம். எந்தப்பொருளிலும் இறைநிலையைக் காணக் கூடிய அறிவு-செயல் விளைவு நீதி உணர்ந்த தெளிவு துன்பங்களுக்கு விடிவாகும். இன்பமாக , துன்பமாக உணர்வாக விளங்குவது இறைநிலையின் தன்மாற்றமே என்று உணர்ந்தால் ஒரு மனிதன் , இன்னொரு மனிதனுக்கோ அல்லது உயிரினத்துக்கோ துன்பம் விளைவிக்கக் கூடிய துணிவு வராது .அதே நேரத்தில் துன்பபடக் கூடியவர்களுக்கு உதவி செய்யாமல் வெளியேறக் கூடிய துணிவும் வராது.விளைவறிந்து செயல் செய்தால் வாழ்வில் வெற்றியும் ,அமைதியும் ,இன்பமும் கிட்டும்.


"இறையுணர்வும் அறநெறியும் பேறாய்ப் பெற்ற
எவர்க்கும் எண்ணம் சொல் செயல்கள் மூன்றில்
மறைபொருளே பொருத்தமுள விளைவைத் தோன்றி,
மனதுக்கு இன்பம்துன்பம் அமைதி என்னும்
நிறைவுதரும், திருவருளின் நடனம் காண்பார்,
நேர்வழியில் செயல்செய்தே விளைவைக் கொள்வார்.
குறையேது? எதனை எவரிடம் கேட்டுப் பெறுவதற்கு?
குற்றமற்ற குணக்குன்று அருள் சுரங்கம்".

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக