Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அறிய நினைத்தால் அமைதி

தான், இயற்கை, சமுதாயம் என்ற மூன்று கோட்டு முக்கோணத்துக்குள் தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. எந்த இயற்கையும் இதை மாற்ற முடியாது.இம்மூன்றையும் மனம் அறிந்து மதிக்கும் அளவில் தான் மனத்திற்கு உயர்வு கிடைக்கும் .இந்த சமுதாயமோ இயற்கையை ஒட்டிய சில விதிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சமுதாய வளத்தையும், ஒழுங்கையும் பாதுகாத்து அதன் பயனாக இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக்கொள்ள வேண்டும் . அதற்கு மனம் தன்னையே பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனென்றால் எல்லாமே மனதிற்குள்ளாகத்தான் இருக்கின்றது.

எல்லாமே மனத்திற்குள்ளாக இருந்து தான் வர வேண்டும். மனத்தின் மகத்துவத்தை உணராதவர்கள் தனக்கும் சமுதாயத்திற்கும் துன்பம் விளைவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மனதைப் பற்றி அறியாதவர்கள் இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வரவேண்டும் என்று அறியாமல் எங்கெல்லாமோ அவற்றை தேடி அலைந்து துன்புறுவார்கள்....

----வேதாத்திரி வகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக