Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 6 பிப்ரவரி, 2014

யோகம்

ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிப் பரம் பொருளை உணர்ந்து பிறவிக் கடலை நீந்திக் கரையேறுவதற்காகவே தனக்கேற்றவாறு உடலைக் கட்டிக் கொண்டது. அதைக் காத்தும் வருகின்றது. எனினும் புலன்களில் மயங்கிக் கிடக்கும் வரை அது மாயை என்ற விளக்கமிலா மன நிலையோடும், 'தெளிவு' பெற்ற நிலையில் அதுவே தெளிந்த அறிவு நிலையிலும் செயலாற்றுகின்றது. அறநெறியில் பிறழாது வாழ்ந்து கொண்டே அறிவறிந்த பெரியோர்கள் மூலம் தனது அறிவின் ...நிலையையும், தோற்றமாகக் காணும் பிரபஞ்ச இயக்க விதிகளையும் அறியவும், அவற்றிற்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை விளங்கிக் கொள்ளவும் ஏற்ற அகநோக்குப் பயிற்சியில் ஈடுபட்டுத் தன்னைப் பற்றியும், இயற்கை விதியைப் பற்றியும், சமுதாய அமைப்பைப் பற்றியும், அறிந்து கொள்வது தவம் (Meditation) அல்லது யோகம் எனப்படும். யோகம் என்பது அகநோக்குப் பயிற்சியாகும். இது இரண்டு கட்டங்களையுடையது. மனதைப் புலன்களிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயப்படுத்தல் முதற் கட்டம், ஆன்மாவைப் பரத்தில் லயப்படுத்தல் இரண்டாவது கட்டம். இந்தப் பயிற்சியினால் மனம், ஆன்மா, பரம் என்னும் மூன்று மறை பொருட்களின் நிலைகளும் அவற்றின் சிறப்புகளும் விளக்கமாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக