Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 1 பிப்ரவரி, 2014

ஐம்புலன்களின் வழியே செயலாற்றி வரும் மனம் உடனே ஒடுங்கி தன்னை அறிந்து, மூலத்தை அறிந்து கொள்ள முடியுமா?




சுவாமிஜி :
ரங்க ராட்டினத்தின் மீது அமர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் சுற்றுப் புறக்காட்சியைத் தெளிவாகக் காண்பது முடியுமா? ராட்டினத்தின் சுற்று விரைவிலிருந்து நின்று நிலைத்த பின்னரே அவனைச் சுற்றியிருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்த்தறிகிறான்.
...
அது போன்றே புலன் அறிவில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் மனம் தன்னைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? மனம் நின்று நிலைக்க வேண்டுமல்லவா? அதற்கு வழியென்ன ? தன்னை ஒடுக்கித் தன் மூலநிலையாகிய உயிரற்றலில் இணைந்து , தன் இயக்கத்தில் நினைவை நிறுத்தினால் தானே அது சாத்தியம்?

மனம் உள் ஒடுங்கக்கூடிய ஆற்றலோடு , கூடவே அலைந்தும், விரிந்தும் , கவர்ந்தும் செல்லக்கூடியது. இதன் காரணமாக விலங்கினப் பதிவுகள் எழுச்சி பெற்று பழிச்செயல்கள் ஆற்றி பிறவித் தொடர் நீள்கிறது. பலப் பிறவிகள் தோறும் ஆற்றிய செயல்களிலிருந்து விடுதலை பெற வேண்டியது மிகமிக இன்றியமையாதது. அதற்கான பயிற்சிதான் அகத்தவம் .

மனதின் பிறப்பிடமாகிய உயிராற்றலிலேயே மனதை நிறுத்தி அடக்கி முதலில் தன்னை உயிராக உணர்வதும், ஆதன் பின் தன விரைவைக் குறைத்து மேலும் ஒடுங்கிச் செயலற்று நின்று பரமாகி அமர்ந்து தன தகைமையை உணர்வதும் முடிவான முறை. இதுவே அறிவின் முழுமைப்பேறு .

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக