Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மனித உடல்

மனித உடல் மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 1) பருவுடல் 2) நுண்ணுடல் (சூக்கும சரீரம்) 3) காந்த உடல். பருவுடலில் ஓடுகின்ற நுண்ணுடலானது, விண் என்றும், ஆகாசம் என்றும் கூறப்படுகின்ற நுண் துகள்களின் ஓட்ட இயக்கமேயாகும். விண் துகளோ தன்னைத் தானே விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதனால், அது ஒரு காந்த நிலையமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண் துகளிலிருந்து வெளியேறுகின்ற இறைத்துகள் (Ether) அலைகளாக உடல் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது. உடலில் ஏற்படுகின்ற இந்தக் காந்த அலைகளை ஜீவகாந்தம் என்று சொல்கிறோம்.

இந்த ஜீவகாந்தம் தான் உடல் உறுப்புகளுக்கு ஆற்றலை அளித்துச் செயல்படுத்துகின்ற ஆற்றலாகும். பருஉடலில் இந்த ஜீவகாந்தம் உற்பத்தியாகி இடைவிடாது சுழன்று இயங்கி ஓடிக் கொண்டிருக்கும்போது இறையாற்றலின் நியதிப்படி, உடலின் மையமான் இடத்தில் சிறிது அதிகமான திணிவு பெறுகிறது. உடலில் மேலும், கீழும், பக்கவாட்டிலும் இருந்து உடல் மையத்தை நோக்கிப் பார்த்தால் அங்கு தான் இந்த ஜீவகாந்த அலையின் அழுத்த மையம் அமைந்திருக்கிறது. இதுவே தான் "கருமையம்" ஆகும். இதுவரை மெய...்ஞ்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும் உணர்ந்து வெளியிடாத ஒரு சிறப்பு இயக்கம்தான் "கருமையம்".

இந்த இடத்தை யோகிகள் மூலாதாரம் என்று சொல்வார்கள். ஆன்மாவின் இருப்பிடமான அகம் (Soul) என்றும் குறிப்பிடுவார்கள். சந்தேகமின்றி இது காந்தத் தத்துவத்தில் அடங்கிய ஒரு புதிர் போன்ற தத்துவமாகும். தன்னிலை விளக்கம், இறைநிலை விளக்கம் இவ்விரண்டையும் அறிந்தவர்களுக்குத்தான் ஜீவகாந்தத்தின் மதிப்பு நன்றாகத் தெரியும். காந்தத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு கருமைய உண்மையை விளங்கிக் கொள்வது எளிதாகும். இவ்வாறு நாம் பிறந்தது முதல் இன்று வரையில் உணருகின்ற எல்லா நிகழ்ச்சிகளும், செயல் பதிவுகளும் அலை வடிவில் சுருங்கி கருமையத்தில் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஒரு குழந்தை பிறக்குமேயானால், தாய், தந்தையாரிடமிருந்த கருமையத்தின் தன்மைகளெல்லாம் ஒன்றுகூட விடாமல் சுருங்கப் பெற்றுக் குழந்தைக்கும் கருமையத்தின் முதல் இருப்பாக அமைகிறது. இந்தத் தன்மைகளுக்கேற்ப அவன் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் செயல் ஆர்வமும், திட்டங்களும் புதிய எண்ணங்களாக உருவாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக