Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 12 பிப்ரவரி, 2014

வெற்றி பெற வழி

தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும் . கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இவை தான் வேதங்கள் , புராணங்கள் சொல்லும் சாரம் ஆகும். சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்தால் . அதை அவர்களால் தீர்க்க முடியவில்லையென்றால் . அப்போது இயன்ற வரையில் நாம் அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும். ஆனால் அதனால் நமக்கு துன்பம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.... ஏனென்றால் அத்துன்பத்தினால் நாம் பிறரிடம் போய் அதை தீர்க்கும் படி கேட்கும் நிலை வந்து விடக்கூடாது அல்லவா? அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது. பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில் நமக்கு என்னென்ன தேவையோ , அது தானாகவே அமையும். இதற்காக கெஞ்சி பெற வேண்டியது இல்லை. எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்கு தகுந்தவாறு உனக்கு விளைவும் , வெற்றியும் வரும் . --

---அருள் தந்தை

சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.
"கடமையை உணர்ந்திடு. காலத்தில் செய்திடு.
உடம்புக்கும் நல்லது. உள்ளமும் தூய்மையாம்".
.
இன்று செய்ய வேண்டியது :
"அன்றிருந்த அறிவின் சூழ்நிலைக்கும்
ஆராய்ச்சித் திறமைக்கும் ஏற்ப வாழ்ந்தார்,
சென்றுவிட்ட நாட்களிலே மனிதர் வாழ்ந்து
சிந்தனையால் அனுபவத்தால் அடைந்த தேற்று,
இன்றிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும்
எதிர்கால விளைவுகளை யுகங்கொண்டும்,
என்றென்றும் மனித இனம் அல்லல் அற்று
இவ்வுலகில் வாழப் பெருமுயற்சி செய்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக