Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பிரம்ம வித்தை :


 பஞ்சபூத தத்துவத்தையும், அதன் முடிவான சுத்தவெளியையும் விளக்கி, விரித்து விரித்துப் பேசுவதால் மட்டும் கிடைத்துவிடாது. புலன் வழி இயக்கங்களை நிறுத்தித் தன்னிலையில் நிற்கும் மெய்யுணர்வு எனும் எல்லையில் தனித்து இருந்து இருந்துப் பழகி, மௌன நிலையறிந்து, அதனால் ஏற்படும் நுட்பம், சக்தி, திறமை இவைகளைக் கொண்டு மேல...ும் ஆராய்ந்து தானே ஆதியாய், அணுவாய், அறிவாய், பலவாய், ஒன்றாய், இயக்கங்களாய், இயக்கங்கள் அனைத்தையும் கடந்த மௌனமாய் இருக்கும் தன்மையை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்த அவ்வெல்லையில் மறவாத ஞாபகத்துடன் புலன்களை இயக்கி வாழவேண்டும். மனிதன் அறிவின் ஆற்றலால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறான். இவ்விதம் கற்றுக்கொள்ளும் வித்தைகள் அனைத்திலும் உயர்வானதும் முடிவானதும் தான் "பிரம்ம வித்தை" எனப்படும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

1 கருத்து: